Saturday, February 2, 2013

உண்மையான பாதுகாப்பு எது?


உண்மையான பாதுகாப்பு எது?

பிறவி எடுத்த ஒவ்வொரு மனிதனும் இந்த உலகில்
ஒரு நாள் இறந்துதான் போகவேண்டும்
என்பது யாராலேயும் மாற்றமுடியாத விதி.


















தெய்வங்களும் இவ்வுலகில் மனிதனாக
அவதாரம் எடுத்தாலும் அவர்களும்
இந்த உலகில் அவதாரம் செய்து வாழ்ந்து
வந்த உடலில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு
அந்த உடலில் வாழ இயலாது.

அதை விட்டுதான் அவர்கள் முன்பு
இருந்த நிலையை அடையவேண்டும்.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில்
 மனிதன் பல பருவங்களை கடந்து
முதுமை பருவத்தை எய்தி முடிவில் மாண்டு போகின்றான்.
பிறப்பிர்க்கு முன் நிலை என்ன என்று தெரியாது.
இறப்பிற்கு பின்பு என்ன ஆகும் என்று தெரியாது.

இதில் குழந்தைபருவம் ஒன்றும் அறியாத பருவம்.
பால பருவம் மற்றும் வாலிப பருவம்
 பலவற்றை அறிய முற்படும் பருவம்.
அறிந்து தெளிவதற்கும் ஆயுள் முடிந்துவிடுகிறது.

சிலருக்கு பிறவியின் தொடக்கத்திலேயே
முடிவும் வந்துவிடுகிறது.

இதைதவிர தூக்கத்திலேயும்,ஏக்கத்திலேயும்
துக்கத்திலேயும்,ஆயுளில் பாதிக்கு
மேல் வீணாகிவிடுகிறது.

மீதம் உள்ள ஆயுட்காலத்தில்
நிலையில்லா வாழ்வில் சொத்துக்களை சேர்ப்பதிலேயும்,
சேர்த்த சொத்துக்களை பாதுகாப்பதிலேயும்,பொறாமை,போட்டி, கவலைகள் நோய்கள் என ஏராளமான தொல்லைகள்.

தானாக வரும் தொல்லைகள் ஒருபுறம்,
தானாக வருவித்துக்கொண்ட தொல்லைகள் ஒருபுறம்,
பிறர் தரும் தொல்லைகள் ஒருபுறம் என
பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

ஏன் பிறந்தோம் என்று தெரியவில்லை,
எதற்க்காக பிறந்தோம் என்று தெரியவில்லை,

தனியாக இருந்தாலும் பாதுகாப்பு இல்லை.
கூட்டமாக இருந்தாலும் பாதுகாப்பு இல்லை.
ஏனென்றால் நம்மை விட
வலிமையான கூட்டம் வந்தால்
நம் கதி அதோகதிதான்.

ஏதாவது மதத்தை சார்ந்து இணைந்திருந்தாலும் பாதுகாப்பு இல்லை.
ஒவ்வொரு மதத்திலும் மதவெறியர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் மனிதர்களுக்குள்ளே வெறுப்பையும்
விரோதத்தையும் தூண்டி விட்டுகொண்டிருப்பதால்
இன்று மனித இனம் அமைதியாக வாழ இயலவில்லை.

வல்லரசுகள் ஆயுதங்களை புதிது புதிதாக
உண்டாக்கி கொண்டு இருக்கின்றன
மனித இனத்தை அழிப்பதற்கு.

ஒரு மனிதன். உறங்கும்போது
அவனுக்கு யார் பாதுகாப்பு தருவது?

கருவறையில் இருக்கும்போது
ஒரு குழந்தை சந்திக்கும் பிரச்சினைகள் பல ஆயிரம்.

அதே குழந்தை உலகில் பிறந்ததும்
இறப்பு வரை சந்திக்கும் பிரச்சினைகள் கணக்கற்றவை.

இந்நிலையில்நம்மை பாதுகாப்பது யார்?

நம்மை படைத்த இறைவன்தான்
நமக்கு உண்மையான பாதுகாப்பு.

கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கும் இருக்கிறார் என்று நம்புவர்களுக்கும் அவன்தான் உண்மையான துணை. .

இந்த உலக பாதுகாப்புகள் எதுவும்
ஒரு அளவிற்கும் மேல் பயன்தராது. போகும்
என்பதை உணரவேண்டும்.

எனவே வீணான கவலைகளை விட்டுவிட்டு.
நேர்மையுடன், அன்புடன் கடமைகளை
செய்து வருவதுடன் நம்மை படைத்த இறைவனை
காலையில் உறக்கத்திலிருந்து கண்விழிக்கும் போதும்
மீண்டும் உறங்கும் போதுமாகவாவது நினைத்துகொண்டு
அவனுக்கு நன்றி சொன்னோமானால்
நம் வாழ்வு நன்றே அமையும்.

3 comments:

  1. நன்றி
    புத்தக வெளியீட்டு விழாவில்
    மும்முரமாக இருந்தீர்கள் போல தெரிகிறது.
    மீண்டும் உங்கள் கருத்துக்களை காண மகிழ்ச்சி

    ReplyDelete
  2. நல்ல பதிவு. கடவுள் என்று பொத்தம் பொதுவாக சொல்லிவிட்டு இந்து மத சிலை வழி பாட்டை குறிக்கும் படத்தை போட்டது ஏணோ?

    regards from

    kannan.
    http://samykannan.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி.

      நல்லதொரு கேள்வி?
      படிப்பவருக்குதான் சந்தேகம் எழும்?
      சிந்திப்பவருக்குதான் கேள்விகள் எழும்?
      பார்ப்பவன் எதையும் அப்படியே நம்பிவிடுவான்?

      இந்த படத்தில் வானம் உள்ளது அது அனைத்து மதத்தை சார்ந்தவர்களுக்கும், எந்த மதத்தை சாராதவர்களுக்கும் பொது

      பரம்பொருள் அனைவருக்கும் பொது .யார் எந்த பெயரிட்டு அழைத்தாலும்.

      தர்மம் அனைவருக்கும் பொது.
      அனைவரும் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும்
      அனைவரும் ,இந்த உலகமும் நன்றாக வாழ

      அதர்மத்தை கடைபிடிப்பவன்
      உலகத்தையும் அழித்து தானும் அழிகின்றான்.

      அனைவருக்கும் பொதுவான தர்மம்தான் ராமனாக உருவெடுத்து இவ்வுலகிற்கு வந்தது.வாழ்ந்தது,நீதிகளை போதித்து மட்டுமல்லாமல் வாழ்ந்தும் காட்டியது.

      ராமன் வேண்டுமானாலும் இந்து கடவுளாக இருக்கலாம்.
      அவன் காட்டிய பாதை அனைவருக்கும் பொது.

      மனித மனம் ஒரு குரங்கென்பர்

      அந்த குரங்கும் தெய்வமாகலாம் என்பதற்கு அனுமான் ஒரு உதாரணம். அதுவும் அனைத்து தெய்வங்களின் சக்திகளையும் பெற்று புகழ் பெற்று விளங்கலாம் என்பதற்கு ஒரு சாட்சி.

      ராமபிரான் விலங்குகள்,அசுரர்கள், என அனைத்து உயிர்களையும் நண்பனாக ஏற்றுக்கொண்டவன்

      நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் கருத்துக்கும் செவி சாய்ப்பவன்.

      உருவத்தை வணங்குவதை பழிக்கும் மதத்தினரும் ஏதாவது ஒரு உருவத்தை,இலச்சினையை இறைவன் தொடர்பாக பார்த்து தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். சிலர் அணிந்துகொள்கிறார்கள்.

      இறை நம்பிக்கை இல்லாத சிலர் படங்களையும் சிலைகளையும்நிறுவி சில தினங்களில். மலர் தூவி வழிபடுகிறார்கள்.ஆத்திகர்கள் செய்தால் அது மூட நம்பிக்கை.அவர்கள் செய்தால் அது பகுத்தறிவு.

      புராணங்களில் பகுத்தறிவிற்கு ஒவ்வாத செய்திகள் ஏராளம் இருக்கலாம். அதற்காக அவைகளை தேவையற்றவை என்று ஒதுக்கிவிடமுடியாது. காலவெள்ளத்தில் அவைகள் அதில் கலந்திருக்கலாம். அன்னத்தைபோல் பாலில் கலந்துவிட்ட நீரை பிரித்து பாலை மட்டும் உண்ணுவது அறிவுடையோர் செயல்..

      மேற்கண்ட சிந்தனைகளின் அடிப்படையில் நான் ராமனும்,அனுமனும் இணைந்த இந்த படத்தை தேர்ந்தெடுத்தேன்.

      இது என்னுடைய தனிப்பட்ட கருத்து

      Delete