Thursday, January 31, 2013

அம்பிகையே,அலைமகளே,கலைமகளே மலைமகளே உனக்கு வந்தனங்கள் பல கோடி






அம்பிகையே,அலைமகளே,கலைமகளே
மலைமகளே உனக்கு வந்தனங்கள் பல கோடி


தங்க நிறம் கொண்டவளே
உண்மையான பக்தர்களின் இதயத்தில்
தங்க மனம் கொண்டவளே 

தரணியில் தகமையாய் அனைத்து
வளங்களையும் அளிப்பவளே

அகிலத்தின் இருள் போக்கி ஒளி தரும் 
ஆதவனின் ஒளியாய் இருப்பவளே

அனைவரின் இல்லங்களிலும் 
தீப ஒளியில் தோன்றி மங்களம் தருபவளே

உன் தரிசனத்தால் என் அக இருள் நீங்கி 
ஞானம் ஜோதியாய் பிரகாசிக்கட்டும். 

அம்பிகையே,அலைமகளே,கலைமகளே
மலைமகளே உனக்கு வந்தனங்கள் பல கோடி

No comments:

Post a Comment