Friday, January 11, 2013

ஹனுமான் ஜெயந்தி


























ஹனுமான் ஜெயந்தி

தன்னை வழிபடுவோர்க்கு
புத்தியில் பலமும் 
அகலா வீரமும்
பயமில்லா வாழ்வும்
வாக்கு வன்மையும் 
அருள்பவன் 
அஞ்சனை மைந்தன்

வெள்ளை உள்ளம் கொண்டு 
வெண்ணை சாற்றி பூஜித்தால் 
எண்ணும் எண்ணமெல்லாம் 
நிறைவேற்றி வைப்பான் 

வாழ்வில் இனி வெற்றி இல்லையோ  
என்று ஏங்கி தவிப்போருக்கு 
தனக்கு வெற்றி தரும் வெற்றிலை 
மாலை அணிவித்து பூஜித்தால் 
வெற்றி மகுடம் சூட்டிடுவான் 

வடை மாலை அணிவித்து 
அவனை வழிபாடு செய்தால் 
வாழ்வில் வரும் 
தடைகளைனைத்தையும் 
தகர்த்திடுவான் 

ராம நாமம் கொண்டு அவனை
வழிபட்டால் அவர்கள் உள்ளத்திலேயே 
தங்கி அருள் செய்திடுவான் .

ஜெய் மாருதி  

3 comments:

  1. அஞ்சனை மைந்தனின் ஆராதனை அருமை! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  2. Replies
    1. வருகைக்கும் தங்கள் மேலான கருத்துக்களுக்குநன்றி.

      Delete