Wednesday, January 2, 2013

ஏழுமலையானை நினைக்க நினைக்க வாழ்வில் ஏற்றம்தான் எப்போதும்



ஏழுமலையானை நினைக்க நினைக்க 
வாழ்வில் ஏற்றம்தான் எப்போதும் 





ஏழுமலையானை எண்ணி துதிப்பவர்களுக்கு
எண்ணிய எண்ணம் எல்லாம் நிறைவேறும்
அனுதினமும் ஏழுமலையானை எண்ணி
துதிப்பவர்களுக்கு எண்ணிய எண்ணம்
எல்லாம் நிறைவேறும்

திருப்பதி சென்று திரும்பி வந்தால்
உன் விருப்பம் நிறைவேறும்

ஏழுமலை இருக்க நமக்கென மனக்கவலை
ஏழேழு பிறவிக்கும் நமக்கேது தொல்லை

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறையொன்றும் இல்லை கண்ணா


வேங்கடத்தில நிற்ப்பவன்
வந்து பணிவோரின்
வெந்துயர்களை களைபவன்

வரம்பின்றி  வரங்களை தருபவன்
அவன் கோயிலை வலம் வருவோரின்
வாழ்வை வளம் பெற செய்பவன்.


அவனை நினைக்க நினைக்க நெஞ்சம்
அவனிடம் தஞ்சம் புகுந்திடும்
வாழ்வில் பஞ்சம் நீங்கிடும்


கவலைகளை மனதில் சுமந்துகொண்டு
கால் கடுக்க நடந்து சென்றாலும்
அவனை கண்ட மறுகணம் அனைத்தும்
மாயமாகிபோகும் அந்த
மாயவனில் அருட்பார்வையில்




உண்டியலில் காசை போட வைப்பான்
நம் உள் மனதில் மனதில் உள்ள
மாசையும் நீக்கிடுவான்.












இப்படியாக நம்மையெல்லாம்
காத்து ,ரட்சிக்கும்
கருணை தெய்வம் பாலாஜி

அவனை வரைந்தேன் .
அனைவருக்கும் கொடுத்தேன்.
வணங்கி வாழ்வில் வளம் பெற.

இதோ வலையுலக நண்பர்களுக்கு
வாழ்வில் அனைத்து இன்பங்களும்
பெற்று மகிழ அந்த படம் இதோ.



4 comments:

  1. அழகான ஓவியம்! பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்கு நன்றி

      Delete
    2. Thanks for sharing the drawing Nice picture.
      with warm regards.

      Delete
    3. பாராட்டிற்கு நன்றி

      Delete