Thursday, January 24, 2013

சங்கஷ்ட நாஸன ஸ்ரீகணேசஸ்தோத்ரம் (நிறைவு பகுதி)

சங்கஷ்ட நாஸன
ஸ்ரீகணேசஸ்தோத்ரம் (நிறைவு பகுதி)

  
இறைவன் நமக்கு ஐம்புலன்களை
கொடுத்திருக்கிறான்.
ஐம்புலன்களோடு மனிதனின் அறிவிற்கு
எட்டவொண்ணா செயல்பாட்டையும் சக்தியையும்
அதனுடன் நாம் கேட்காமலேயே அளித்திருக்கிறான்.

 நல்லவை தீயவை என அறிந்து தெளிந்து
செயல்பட அறிவை கொடுத்திருக்கிறான்.

இவ்வளவு இருந்தும் மனிதர்கள் இறைவன்
கொடுத்த வரங்களை முறையாக பயன்படுத்துவது கிடையாது.

பலர் அறிவை பயன்படுத்துவதே கிடையாது.
மனம் போன போக்கில் வாழ்க்கை வாழ்கிறார்கள்.
வாழ்நாள் முழுவதும் துன்பத்தில் உழல்கிறார்கள்.
முறையாக பயன்படுத்துவோர் வசதியாக வாழ்கிறார்கள்.

இவ்வளவு இருந்தும் எல்லாம் சரியாக திட்டமிடப்பட்டும்,
முறையாக செயல்படுத்தியும் தீர்க்கமுடியாத தடைகள் வருகின்றன.

மனித சக்திக்கு அப்பாற்பட்ட சங்கடங்கள் வரும்போது
அவைகளிலிருந்து நாம் விடுபட நாம் இறைவனின்
கருணையைத்தான் நாட வேண்டியுள்ளது.

இந்நிலையில் இறைவனிடம்
எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்பதை
விளக்கும் தோத்திரம்தான் ஸ்ரீ கணேசரின்
சங்கடம் நீக்கும் தோத்திரம்.

பரம்பொருள் பல தெய்வங்களாக வடிவம்கொண்டு
தன் படைப்புகள் துன்பமில்லாமல் வாழ
அருள் செய்ய எண்ணம் கொண்டிருந்தாலும்.
தொடங்கும் செயல் தொய்வில்லாமல்
நடந்து நிறைவு பெற நாம் அனைவரும் நாடுவது
கணங்களுக்கெல்லாம் ஈசனாய்விளங்கும் கணபதி
என்னும் கணேச பெருமானைதான் நாடுகிறோம்.

இனி அந்த தோத்திரம் பற்றி பார்ப்போம்.

சங்கஷ்ட நாஸன
ஸ்ரீகணேச
ஸ்தோத்ரம் 




பதினெட்டுப் புராணங்கள் பற்றி மக்கள் அறிவார்கள்.  
இவை போலவே பதினெட்டு உப புராணங்களும்
எண்ணற்ற ஸ்தல புராணங்களும்  உண்டு.
இந்த ஸ்தோத்ரம் 'நாரத புராணம்' என்னும்
உபபுராணத்தில் காணப்படுவது
.  

இந்த ஸ்தோத்திரம் சங்கடங்களை நீக்க வல்லது. 
சங்கடங்களை நீக்குவதற்கென்று விநாயகமூர்த்தங்களில்  
ஒரு விசேஷ வழிபட்டு மூர்த்தி இருக்கிறார்.

 'சங்கடநாஸன கணபதி'  என்பது அவருடைய பெயர்.
 மேலே காட்சி தருபவர். 
சங்கடஹரர் என்று சொல்வார்கள். 
அவருக்கு உரிய விரதம் 'சங்கடஹர சதுர்த்தி'.
              
சங்கடஹர சதுர்த்தியன்று இந்த தோத்திரத்தைப் 
படித்து வழிபடலாம்.     
              
அழகிய சிறிய சம்ஸ்கிருத தோத்திரம். 
சுலபமாக  மனனம் செய்யலாம்.

இதனை காலை, மதியம், மாலை 
ஆகிய மூன்று வேளைகளிலும்
படித்தால் சங்கடங்களும் விக்கினங்களும் நீங்கி 
அவரவர் கோரிய  பலனைப் பெறலாம் 
என்று அந்த புராணம் கூறுகிறது.
              
இதனை அதற்குரிய ராகத்தில் 
மெதுவாகப் பாடினால் மனமும்
உருகி லயிக்கும். அற்புதமாக இருக்கும்.

சங்கடஹர சதுர்த்தியன்று விசேஷ வழிபாடுகளை
நடத்தும்போது அனைவரும் இந்த தோத்திரத்தை பாடி வழிபடலாம் 

இந்த தோத்திரத்தில் சங்கடநாசனருக்கு உரிய
விசேஷமான பன்னிரண்டு நாமங்கள் இருக்கின்றன.

இதைப் படித்தால் இடையூறுகள் தடங்கல்கள் முதலிய பயங்கள்
நீங்கும். எல்லாவற்றிலும் வெற்றி கிட்டும்.


படிப்பவர்களுக்குப் படிப்பும், தனம் வேண்டுபவர்களுக்கு  தனமும்,
மக்கள் செல்வம் வேண்டுபவர்களுக்கு மக்களும், மோட்சம்
வேண்டுபவர்களுக்கு உரிய கதியும் கிட்டும்.


 தோத்திரத்தின் ஆரம்பத்திலேயே போட்டிருக்கிறது, பார்த்தீர்களா -
"ஆயுர் காமார்த்த ஸித்தயே". அதை மனதில் இருத்திக்கொண்டு
ஸ்ரீ சங்கடநாஸன கணபதியிடம் உங்களின்  சங்கடத்தைத் தெளிவாக
எடுத்துரைத்து அதை நீக்குமாறு  சங்கல்பத்தைச் செய்து படியுங்கள்.
கடைசி வரியில்  'நாத்ர ஸம்ஸய' என்று காணப்படுகிறது அல்லவா?
சந்தேகமே படக்கூடாது. முழுநம்பிக்கையோடு வேண்டுதல்  செய்து
படிக்கவேண்டும்.


நாரத உவாச -
ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீபுத்ரம் விநாயகம்
பக்தாவாஸம் ஸ்மரேந் நித்யம் ஆயு:காமார்த்த ஸித்தயே


தீர்க்காயுள் ரோகமில்லாத வாழ்க்கை, செல்வம், சுகம் இவைகளை
விரும்புபவர் கௌரியின் புத்திரனைவேண்டி இந்த ஸ்லோகத்தைச்
சொல்லி நமஸ்கரிக்கவேண்டும்.


ப்ரதமம் வக்ரதுண்டம் ச ஏகதந்தம் த்வீதீயகம்
த்ருதீயம் க்ருஷ்ணபிங்காக்ஷம் கஜவக்த்ரம் சதுர்த்தகம்
வளைந்த துதிக்கையை உடையவரே! 
ஒற்றைத் தந்தம் கொண்டவரே!
லேசாகச்சிவந்த விழிகளால் பக்தர்களை அனுக்ரஹிப்பவரே! 
யானை முகத்தவரே!

லம்போதரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகடமேவ ச
ஸப்தமம் விக்நராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டமம்

சரிந்த தொந்தி உடையவரே! மதஜாலப் பெருக்கை உடையவரே!
விக்னேஸ்வரரே! கருஞ்சிவப்பு நிறமுடையவரே!


நவமம் பாலசந்த்ரம் ச தஸமம் து விநாயகம்
ஏகாதஸம் கணபதிம் ச த்வாதஸம் து கஜாநநம்


நெற்றியில் இளம்பிறை சந்திரனை தரித்தவரே  !  
கணங்களின் தலைவரே!
விநாயகரே! யானை முகத்தவரே!

த்வாதஸைதாநி நாமாநி த்ரிஸந்த்யம் ய: படேந் நர:
ந ச விக்நபயம் தஸ்ய ஸர்வ ஸித்திகரம் ப்ரபோ


இந்தப் பன்னீரண்டு பெயர்களையும் மூன்று வேளைகளிலும்
படிப்பவர்கட்கு இடையூறு நீங்கி எடுத்த காரியம் வெற்றி அடைகிறது
.

வித்யார்த்தி லபதே வித்யாம் தநார்த்தீ லபதே தநம்
புத்ரார்த்தி லபதே புத்ராந் மோக்ஷார்த்தீ லபதே கதிம்

    
கல்வியை விரும்புபவருக்குக் கல்வியையும், செல்வத்தை
வேண்டுவோருக்கு செல்வமும், மக்கட் பேற்றை விரும்புபவர்க்கு
குழந்தைச் செல்வத்தையும், மோட்சத்தைக் கோருகிறவருக்கு
மோட்சமும் கிடைக்கிறது.

ஜபேத் கணபதிஸ்தோத்ரம் ஷட்பிர் மாஸை; பலம் லபேத்
ஸம்வத்ஸரேண ஸித்திம் ச லபதே நாத்ர ஸம்ஸய:மொ


இந்தக் கணபதி ஸ்தோத்திரத்தை பயபக்தியுடன் விடாமல் ஆறு
மாதங்கள்  சொல்பவர்க்கு நினைத்த காரியம் ஈடேறும்.படிப்பவர்களுக்கு
அட்டமா சித்தியும் கைகூடும் என்பதில் சந்தேகமில்லை.


அஷ்டப்யோ ப்ராஹ்மணேப்யஸ்ச லிகித்வா ய:ஸமர்ப்பயேத்
தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேசஸ்ய ப்ரஸாதத:


எட்டு கணேச பக்தர்களுக்கு  இந்த ஸ்லோகத்தை எழுதிக் (கற்றுக்
கொடுப்பவருக்கு) எல்லாக் கலைகளும் விநாயகர் அருளால் சுலபமாக
வரும் என்று நாரத மகரிஷி ஆசீர்வதித்தார்.

இதி நாரத புராணே ஸங்கஷ்டநாஸன 
ஸ்ரீ கணேச ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்



நன்றி 
தகவலும் படமும் 
வித்யாலங்கார Dr.S.ஜெயபாரதி
http://www.visvacomplex.com/main.html



No comments:

Post a Comment