Sunday, March 31, 2013

நாமக்கல் ஆஞ்சநேயன்





நாமக்கல் ஆஞ்சநேயன்




அஞ்சனை மைந்தன்
ஐந்தெழுத்தின்
அம்சமாய் பிறந்தவன்


வாயு குமாரன்
ராம தூதன்



அன்னை சீதையின்
சோகம் தீர்த்தவன்

அசுரர்களின்
கொட்டத்தை அடக்கியவன்


பக்த சிரோமணி
அபயமளிக்கும் அழகன்

அடிபணிகின்றேன்
உன் திருவடிகளை

வெற்றிலை மாலை அணிவித்து வணங்கினால்
வெற்றிகளை அளவின்றி தருபவன்

வடை மாலை சாற்றினால் வாழ்வில்
வரும் தடைகளை தகர்ப்பவன்

பக்தியுடன் வெண்ணைகாப்பு சாற்றினால்
சக்தி தந்து காப்பவன்.

இவன் கைவண்ணத்தில்.

3 comments:

  1. Gopalakrishnan

    ஸ்ரீராமஜயம்

    வணக்கம். தங்கள் கை வண்ண்ம் இங்கு கண்டேன்.

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.



    தத்ரூபமாக வரைந்துள்ளீர்கள்.

    இறை அருள் நிறையவே பெற்றுள்ளீர்கள்.

    மனமார்ந்த் பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள்.

    நன்றி VGKsir

    அவித்த உணவின் சுவையை
    அதை வைத்திருக்கும் பாத்திரம்
    அறியுமோ என்ற நிலையில்
    இருகின்றேன் யான்

    எல்லோரும் உன்னிடம்
    இருக்கிறது என்கிறார்கள்

    என்னுள் இருக்கின்ற ஒன்று
    உன்னிடமும் இருக்கின்றது
    என்கிறேன் யான்

    இருந்தும் என்னுள் இருக்கின்ற
    ஒன்றை இன்னமும் உணர்ந்துகொள்ளும்
    தன்மையை அந்த ஒன்று இன்னும்
    எனக்கு தர மறுப்பது ஏன்
    என்று எனக்கு புரியவில்லை?

    ReplyDelete
  2. அருமை படைப்புக்கு வாழ்த்துக்கள்...

    வைகோ ஐயாவுக்கு அளித்த கருத்தும் அருமை...

    ReplyDelete