Friday, January 29, 2016

காந்தியைப் போலொரு ...

காந்தியைப் போலொரு ...

காந்தியைப் போலொரு சாந்த ஸ்வரூபனை
காண்பதும் எளிதாமோ ?

சாந்தி நிலவ வேண்டும்
உலகிலே சாந்தி நிலவ வேண்டும் ..

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியரே--

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது..

என்ற வரிகளை கேட்கும்போது யார் நினைவுக்கு

வருகிறார். இப்போதுள்ள மக்களுக்கு அல்ல

50 வயதைக் கடந்த மக்களுக்கு.

ஆம் அவர்தான் மகாத்மா காந்தி

இன்று அவரை இந்த உலக பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்த தினம்.

ஒரு காலத்தில் அவரை மகாத்மா என்று உலகமே போற்றி கொண்டாடியது.

பல உலக நாடுகள் உட்பட .

ஆனால் இன்று சில சக்திகள் அவருக்கு எதிராக அவரிடம் காணப்பட்ட

சில குறைகளை மட்டும் பெரிதுபடுத்தி அவர் ஆற்றிய அரும்பெரும்

செயல்களை மூடி மறைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவது காந்தியின்

பக்தர்களுக்கு வருத்தமடைய செய்கிறது.

அவரைப் போல் திரைப்படத்தில்  நடிக்க கூட நம் நாட்டில் ஒருவரும் இல்லை

அதற்க்கு ஒரு மேலை நாட்டவர் தேவைப்பட்டது.

இப்படி எதை பற்றியும் ஒரு முழு அறிவையும் இல்லாத மக்களைக்  கொண்டது நம் இந்திய சமூகம்.

எதையும் உணர்ச்சியின் அடிப்படையில் அணுகி முடிவுக்கு வருவது நம்முடைய பண்பாட்டில் ஊறிப்போன விஷயம். .

இந்த உலகத்தில் இறைவன் ஒருவனே குறையில்லாதவன் .அவன்

படைப்புகள் அனைத்தும் குறைகள் உடையவைகள்தான். என்பதை

நடுநிலையாளர்களே உணர முடியும்.

அவருக்கு என் அஞ்சலி-மவுதார்கன் இசை.

https://youtu.be/VwOCEeUFQfM

https://www.youtube.com/watch?v=VwOCEeUFQfM

<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/VwOCEeUFQfM" frameborder="0" allowfullscreen></iframe>


1 comment: