Friday, January 25, 2019

குடியரசு தின வாழ்த்துக்கள்




குடியரசு தின  வாழ்த்துக்கள் 

கொண்டாடுவோம் முடியரசை
வீழ்த்தி குடியரசை அமைக்க
அடித்தளம் அமைத்த  அந்த முகம் தெரியா
கோடானுகோடி விடுதலை வீரர்களுக்கும்
அதை செயலில் கொண்டு வர வழி வகுத்த
உத்தம தலைவர்களை நினைவில் கொண்டு
குடியரசு தின  விழாவினை கொண்டாடி
மகிழ்வோம்.

குடி மக்களை தன் மக்கள் போல் கருதி
அரசர்கள் ஆட்சி செய்த நம் திருநாட்டில் குடிக்க
கற்றுக்கொடுத்து ,அவர்களுக்கு அரசு
செலவில் மதுவை விற்று அவர்களை
மதி மயங்க செய்து மூடர்களாக்கி
ஆள்பவர்கள் மன்னர்கள் போல்
வளம் பெற்று பவனி வருவதை
கண்டு மனம் வெதும்பாமல் "குடியரசு தின  விழா"
கொண்டாடுவோம்.

ஆராயாது தவறான நீதி வழங்கியமைக்காக
தன்னையே தண்டித்துக் கொண்ட மதிப்புமிகு
மன்னர்களாண்ட  மண்ணில் நீதிமன்றம்
தண்டித்தாலும் கண்டித்தாலும் கண்டு கொள்ளாது
ஆட்சியில் நீடிக்கும் நம் நாட்டு ஆளும் வர்க்கம்
வாழ்க வாழ்க என்று குடியரசு தினம் கொண்டாடுவோம்.

உழைப்பவர்கள் வாழ்வையும் உழைப்பையும்
சூறையாடி உண்டு கொழுக்கும் அனைத்து  தீய சக்திகளும்
புற்றீசல்போல் பெருகி வளர  உதவி செய்யும்
சிந்தனை திறன் இல்லாத மக்கள் சமூகத்தை
உருவாக்கி அதிர் குளிர் காயும் வாய்ச் சொல் வீரர்கள்
வாழ்க வாழ்க என்று குடியரசு தினம் கொண்டாடுவோம்.

நாட்டை சுற்றிலும் பாதுகாப்பின்மை ஒருபுறமிருக்க
நாட்டின் உள்ளே நம் ஜனநாயகத்தை சீர்குலைக்கும்
பல தீய சக்திகள் சுதந்திரமாய் நடமாடிட
சுயநல சுரண்டல் பெருச்சாளிகள் கர்வத்தோடு செயல்பட
தம்மையே அழிக்கும் புரையோடிய ஊழலையும்
சுற்றுப்புற சூழல் மாசுகளையும் கண்டும்
காணாதும் இருந்துகொண்டு ஒருநாள் கூத்து போல்
குடியரசு தினம் கொண்டாடுவோம்.

பல துறையில் முன்னேற்றம் கண்டோம் -எனினும்
பிறரோடு பழகுவதில் குறையையே காண்கின்றோம்.
இருப்பதை பிறரோடு பகிர்வதில் இணக்கமில்லை
அன்போடு அனைவரோடும் அனுசரித்து வாழ
மனமில்லை.

இங்கு ஒரு பேச்சு .அங்கு ஒரு பேச்சு
இன்று ஒரு பேச்சு நாளை ஒரு பேச்சு.
பொய்யுரைப்பதிலோ வாள்போல் வீச்சு
மூச்சு நின்றால்   அனைத்தும் போச்சு.





No comments:

Post a Comment