Sunday, January 1, 2012

ஆலயங்களுக்கு செல்வது எதற்க்காக

ஆலயங்களுக்கு செல்வது எதற்க்காக?

ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் வழக்கப்படி
பிரார்த்தனை செய்கின்றனர்.

எல்லாம் வல்லவன் இறைவன் ஒருவனே என்று நினைவுபடுத்திகொள்வதர்க்காக

தான் செய்த பாவங்களை இறைவன் முன்பு
கூறி பாவ மன்னிப்பு  பெறுவதற்காக
மீண்டும் பாவ செயல்களை செய்யாதிருக்க
உறுதி ஏற்ப்பதர்க்காக

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு
துன்பங்கள் நீங்க, வளமான மகிழ்ச்சியான வாழ்வு
அமைய என பலவிதமான கோரிக்கைகள்
இறைவன் முன்பு வைக்கப்படுகின்றன

சமீப காலமாக உள்ளூர் ஆலயங்களுக்கு செல்வதை தவிர
வெளியூர் ஆலயங்களுக்கு செல்லும் மக்களின் கூட்டம்
ஆயிர கணக்கில் பெருகி வருகிறது
 
கோயிலுக்கு செல்வது எதற்க்காக?
நம் மன அழுக்கை நீக்கி கொள்ளத்தான்

ஆனால் கோயிலுக்கு செல்லும் மக்கள் கோயில் செல்லும், நகரையும், கோயில் வளாகத்தையும், சுற்றுப்புறத்தையும் அசிங்கபடுதுவதுடன், பாழ்படுதுவதையும் குறிக்கொள்ளக கொண்டுள்ளனர்

கோயில் நிர்வாகமோ, அரசு நிர்வாகமோ வருவாயை
சேர்பதிலேயே கண்ணாக இருக்கின்றனவே தவிர மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதிலும் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருப்பதிலும் அக்கறை காட்டுவதில்லை என்பதை கோயில்களுக்கு செல்லும் மக்கள் நன்கு அறிவர்

உணவு கழிவுகள், மனித கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ,கந்தைகள் என
கோயில் முழுவதும் வெளியிலும் சிதறி பல நாட்கள் அப்படியே கிடக்கின்றன
கழிப்பிட வசதிகள் செய்ய படா மையால் மக்கள் கோயில் சுற்றுபுறத்தை பொது கழிப்பிடமாக ,சிறுநீர் கழிக்கும் இடமாக மாற்றி சுகாதார கேடுகளை ஏற்படுத்துவதுடன் மக்களுக்கு நோய்களை பரப்பும் கூடாரமாகவும் மாற்றிவிடுகிறார்கள்

 இந்நிலை மாற


அரசுகள் நடமாடும் கழிப்பிடங்களை கண்டிப்பாக அமைத்து தரவேண்டும்
இலவசமாக கழிப்பிடமும் ஒவ்வொரு கோயிலிலும் அமைக்கபட்டு முறையாக பராமரிக்கபடவேண்டும்
குப்பைகளை போட குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டு  பராம்ரிக்கபடவேண்டும்

கோயிலுக்கு செல்லும் மக்கள் அங்கு வழங்கும் பிரசாதங்களை உண்டுவிட்டு கைகளை கோயில் தூண்களில் தடவுவதை விட்டு ஒரு கை துடைக்கும் திஸ்ஸுஎ காகிதத்தையோ கையில் கொண்டு செல்ல வேண்டும் அல்லது கோயில் நிர்வாகமே  அதை தரவேண்டும்

குங்குமம்,விபூதி போன்றவற்றை கையில் அளித்தால் மீதியை கோயில் சுவற்றில் தேய்த்து விடுவதால் ஒரு சிறிய காகிதத்தில்தான் இனி குங்குமம் அளிக்கப்படவேண்டும்


சுத்தம்தான் கடவுள் 

அதைவிடுத்து கடவுள் உறையும் இல்லத்தை அசிங்கபடுதுவது 
அவருக்கு செய்யும் அவமரியாதை ஆகும்

கோயில் உண்டியில் காசு போட்டுவிட்டால் கடவுள் அருள் கிடைத்துவிடும் என்று நம்புவது நம்மை நாமே ஏமாற்றும் செயல்

அதைபோல் கோயிலுக்கு நிதி உதவி அல்லது காணிக்கை அளித்துவிட்டு விளம்பர படுத்தி கொள்வதும் அநாகரீகமான செயல்
 
கடவுளுக்கு ஆபரணங்கள் ஏற்கெனவே நிறையவே இருக்கிறது

கோயில் ஒழுக்கத்தை கடைபிடிப்பது, ஒழுங்கை கடைபிடிப்பது மற்றவரையும்,கடைபிடிக்க  செய்வது
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உதவுவதும் இறைவனுக்கு செய்யும் தொண்டாகும்
 ,
கோயில் நிர்வாகங்களும் காசு ஒன்றிலே குறியாய் இல்லாமல் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது மற்றும் சுற்றுபுறத்தை தூய்மையாக பராமரித்தலும் அவர்களின் கடமையாகும் 




1 comment:

  1. நல்ல பதிவு.
    மக்களுக்கும் பொறுப்புணர்ச்சி முக்கியம்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete