Sunday, January 8, 2012

சொல்வதொன்றும் செய்வதொன்றும்




 நதிகளை தெய்வம் என்கிறோம்


அதுவும் நதிகளை 
பெண் தெய்வமாக போற்றுகிறோம்

கங்கையை விட புனிதமான காவிரி நதியை
தோற்றுவித்தவர் அகத்திய பெருமான் 

காவிரி நதியினால் பல மாநிலங்கள் செழித்து 
வளர்ந்து வாழுகின்றன 

காவிரின் நடுவில்தான் காக்கும் கடவுளான 
அரங்கன் அரி துயில் கொண்டுள்ளான் 
தெய்வம் அனைவருக்கும் பொது 

அதுபோல் தெய்வீகநதியான  காவிரியும்
அது தொடங்கும் இடத்திலிருந்து 
கடலில் சென்று சேரும் வரை 
அனைவருக்கும் பயன்படவேண்டும்

அவ்வாறு செய்யாமல் 
ஒரு மாநிலம் மட்டும் 
அனுபவிக்க நினைப்பது 
இயற்க்கைக்கு முரணானது
காவிரி நீரினால் நம் அனைவருக்கும்
உணவும் குடிநீரும்,மின்சக்தியும்
கிடைக்கிறது
இந்நிலையில் அதை 
கழிவுநீரையும் ரசாயன மற்றும் 
மல கழிவுகளையும் 
குப்பைகளையும் விட்டு மாசுபடுத்தி 
அதன் புனிதத்தன்மையையும், அதன் 
சுத்தத்தையும் தொடர்ந்து 
அழித்துக்கொண்டுவருவது
மன்னிக்க முடியாத குற்றமாகும்

ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து 
நதிகளும் இவ்வாறுதான்
அசுத்தப்படுத்தபட்டு வருகின்றன 

பெரும்பாலான மக்களும் 
இது குறித்து விழிப்புணர்வு இல்லாமல்
இருப்பது கண்டிக்கத்தக்கது
நதியை தெய்வமாக பூஜிக்கும் மக்கள்
வாழும் நம் நாட்டில் இதுபோன்ற 
செயல்களில் ஈடுபடுவது 
அரசுகளும் இதில் அக்கறை  
காட்டாமல் இருப்பது
மிகவும் வருந்ததக்கது 

இது போன்ற இந்த அநீதிகளுக்கு 
அனைவரும்  ஒருநாள் 
பதில் சொல்ல வேண்டி வரும்

அப்போது இயற்கை  தரும் தண்டனை மிக 
கடுமையானதாகவும்  கொடூரமானதாகவும்
நிச்சயம் இருக்கும். 

1 comment:

  1. பதிவை பார்வையிட்டு கருத்தை
    பதிவு செய்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete