Saturday, January 7, 2012


















ஓம் அகத்தீஸ்வரா  சரணம்

அனைத்தையும்  அறிந்தவனே அகத்தீஸ்வரா
அன்புருவானவனே அகதீஸ்வரா

அகந்தையை அழித்திடுவாய் அகத்தீஸ்வரா
அருளை தந்திடுவாய் அகத்தீஸ்வரா

அவநம்பிக்கையை போக்கிடுவாய் அகத்தீஸ்வரா
அமைதியை தந்திடு அகத்தீஸ்வரா

அன்பு மயமாக்கிவிடு அகத்தீஸ்வரா
ஆதரிதருள்வாய் அகத்தீஸ்வரா

ஆணவத்தை அகற்றிவிடு அகத்தீஸ்வரா
ஆறுதலை தந்திடுவாய் அகத்தீஸ்வரா

ஆபத்பாந்தவனே அகத்தீஸ்வரா
இவ்வுலக வாழ்வுதான் அகத்தீஸ்வரா
நிலையில்லை நிலையில்லை அகத்தீஸ்வரா

இதனாலே உன்னடியை அகத்தீஸ்வரா
இறுகவே பற்றினோம் அகத்தீஸ்வரா

இல்லாதவர்க்கு உதவுவதே அகத்தீஸ்வரா
இறைவனுக்கு செய்யும் சேவை அகத்தீஸ்வரா

இதை எனக்கு உணர்த்திடுவாய் அகத்தீஸ்வரா
இவ்வுலக மோகத்தில் அகத்தீஸ்வரா
மூழ்கிய என்னை மீட்டு காத்திடுவாய் அகத்தீஸ்வரா

பக்தியை தந்திடுவாய் அகத்தீஸ்வரா
பாவங்களை போக்கிடுவாய் அகத்தீஸ்வரா

நம்பிக்கை தந்திடுவாய் அகத்தீஸ்வரா
ஞானத்தினை போதித்திடுவாய் அகத்தீஸ்வரா

மன இருளை போக்கிடுவாய் அகத்தீஸ்வரா
மோனத்தில் ஆழ்த்திடுவாய் அகத்தீஸ்வரா

பொறுமையை அளித்திடு அகத்தீஸ்வரா
பொறாமையை போசுக்கிடுவாய் அகத்தீஸ்வரா

தீமையை விலக்கிவிடு அகத்தீஸ்வரா
தீநட்பை அகற்றிவிடு அகத்தீஸ்வரா

நல்லுறவை நல்கிவிடு அகத்தீஸ்வரா
நன்மை செய்ய பழக்கிவிடு அகத்தீஸ்வரா

நிலையில்லா பொருளைஎல்லாம் அகத்தீஸ்வரா
நித்தியம் என்று நம்பினோமே அகத்தீஸ்வரா

நின்னடியை சரணடைந்தோம் அகத்தீஸ்வரா
நல்வழியை காட்டிடுவாய் அகத்தீஸ்வரா

வாழும் வழி வகையறியோம் அகத்தீஸ்வரா
வழி தவறி வருந்துகிறோம் அகத்தீஸ்வரா

உண்மை வழி உணராமல் அகத்தீஸ்வரா
உளம் நொந்து தவிக்கிறோம் அகத்தீஸ்வரா

பொன் பொருட்கள் இருந்தாலும் அகத்தீஸ்வரா
மனம் எதையோ தேடுவதேன் அகத்தீஸ்வரா

எத்தனை நாள் இப்படியே அகத்தீஸ்வரா
நான்அலைந்து திரிந்திடுவேன் அகத்தீஸ்வரா

பணிந்தோரை காப்பவனே அகத்தீஸ்வரா
பதமலர் பணிந்தோமே அகத்தீஸ்வரா

எங்களை காத்திடுவாய் அகத்தீஸ்வரா
என்றென்றும் உன் நினைவே அகத்தீஸ்வரா

உன் திருவடியை பற்றினேன் அகத்தீஸ்வரா
உண்மையை எனக்கு அகத்தீஸ்வரா
விரைவில் உணர்த்திஅருளிடுவாய்  அகத்தீஸ்வரா

காலம் போய்விடும் அகத்தீஸ்வரா
காலனும் வந்திடுவான் அகத்தீஸ்வரா

ஆன்மாவை உணர்ந்திடவே அகத்தீஸ்வரா
எனக்கருள் செய்திடுவாய் அகத்தீஸ்வரா

மரணபயம் போக்கிவிடு அகத்தீஸ்வரா
மறுபிறவி நீக்கிவிடுஅகத்தீஸ்வரா

போற்றி உன்னை பணிந்தோமே அகத்தீஸ்வரா
போதும் எம்மை ஆட்கொள்வாய் அகத்தீஸ்வரா

இனிமேலும் தாங்கிடோம் அகத்தீஸ்வரா
இக்கணமே இன்னருள் செய்வாய் அகத்தீஸ்வரா


No comments:

Post a Comment