Friday, January 20, 2012

உண்மையான இறைவழிபாடு எது?

உண்மையான இறைவழிபாடு எது?

இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் 

ஆம் அது உண்மைதான்

ஆனால் அவன் எங்கு உறைந்திருக்கிறான்?

நம் உள்ளத்தில்தான் உறைந்திருக்கிறான்.

எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை காண நமக்கு வழி தெரியாது
அதை அறிந்து நமக்கு தெரிவித்தவர்களின் சொல்லையும் நாம் கேட்கமாட்டோம். அதன் வழி முயற்சியையும் செய்ய மாட்டோம் 

இந்த உலகத்தை நாம் நம் புலன்களால்தான் காண்கின்றோம், தொடர்பு கொள்கின்றோம் .அதைபோல் புலன்களின் துணை கொண்டு எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை ஏன் காணமுடியவில்லை?

இவ்வுலகில் இறைவனின் வடிவங்கள்தான்
உள்ளனவேதவிர 
இறைவன் அந்த வடிவங்களுக்குள்  
இயங்கும், இயக்கும் சக்தியாக 
இருப்பதை நாம் உணருவதுகிடையாது 

அதை உணர்ந்து கொள்ளும் வரை நாம் தாங்கியுள்ள  இந்த உடலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக கோயில் கோயிலாக இறைவனை தேடிக்கொண்டு அலைவதில் எந்த பிரயோஜனமுமில்லை

நம்முடைய வழிபாடுகளெல்லாம் கடமைக்காக என்று ஆகிவிட்டது

தவறுகள் செய்ய பயபடுவதில்லை ஆனால் தண்டனையை கண்டு பயப்படுகிறோம் 

பாவங்களை செய்ய அஞ்சுவதில்லை செய்த பாவங்களினால் வந்த 
வினைப் பயனை நமக்கு தவறாமல் கொடுக்கும் கிரகங்களை கண்டு அஞ்சுகிறோம் 

பரிகாரம், செய்ய கோயில்கோயிலாக சுற்றுகிறோம், பணத்தை வாரி இறைக்கிறோம் அதற்காகவே நாம் ஆயுள் முழுவதும் பாடுபட்டு பொருள் சேர்த்து செலவு செய்கின்றோம்

யாத்திரை முடிந்ததும் மீண்டும் புலன் வழி இன்பங்களில் மூழ்கி இறைவனை மறந்துவிடுகிறோம் 

இன்று உலகத்தில் லட்சகணக்கான மக்கள் நவக்ரக தலங்களில் கூடுவதே இதற்க்கு சான்று 

பாவங்களை செய்வானேன்? பரிதாபத்திற்குரிய வாழ்க்கை வாழ்வானேன்?

அதனால்தான் பாம்பாட்டி சித்தர் சொன்னார்.'?பாபம் செய்யாதிரு மனமே செய்தால் கோபம் செய்தே யமன் கொண்டோடி போய்விடுவான் என்றார்"

பாவம் மனதில்தான் தொடங்குகிறது.உடல் அதை செய்கிறது. அதனால்தான் இரண்டும் துன்புறுகின்றன இனிமேலாவது மனிதர்கள் திருந்த வேண்டும். 

வருமுன் காப்பவன் அறிவாளி என்றார் அவ்வையார்
வந்த பின் தவிப்பது ஏமாளி.  

தீய எண்ணங்களை தோற்றுவிக்கும் 
அனைத்து இனங்களிலிருந்து நாம்தான் விலகவேண்டும் 
அதுவாக எதுவும் நடக்காது. 

எந்த செலவும் இல்லாமல் நமக்குள்ளேயே இருக்கும் ஒளிவடிவான,நாதவடிவான இறைவனை தரிசிக்க 
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் முயற்சி செய்திருந்தால்
 என்றோ நாம் இறைவனை கண்டு அவன் அருளுடன் 
 நம் வாழ்வை மகிழ்ச்சியாக ஆக்கிகொண்டிருக்க முடியும் 

இனியாவது முயற்சி செய்வோம். 

No comments:

Post a Comment