Thursday, January 26, 2012

இறைவன் படைத்த எதுவும் அழிவதில்லை

பரம்பொருளிளிருந்துதான் 
அனைத்தும் வந்தன
பிரளய காலத்தில் அனைத்தும் 
அதிலேயே அணுவாக மாறி
ஒடுங்கிவிடும்

அது எப்போது நடைபெறும் 
என்று யாருக்கும் தெரியாது

அதை அறியாத மூடர்கள் 2012 ஆம் ஆண்டு 
உலகம் அழிந்துவிடும் என்று 
புருடா விட்டுக்கொண்டு 
மக்களை குழப்பி கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் வாழ்வே இவ்வுலகில்
நிலையில்லாமல் இருக்கும் நிலையை 
அறியா மூடர்கள்

கல்லை சிலையாக மாற்றுபவனும்
அதே சிலையை கல்லாக மாற்றுபவனும்
அந்த இறைவனே 

கல்லை மலைபோல் 
அசையாமல் நிறுத்தி வைப்பவனும் 
கல்லையே காற்றில் பறக்க 
வைப்பவனும் அவனே

மனிதனின்  சக்தியால் 
இந்த உலகத்தை மாற்றிவிடலாம் 
என்று மூடர்கள் நினைக்கிறார்கள்
அந்த சக்தியை மனிதனுக்கு அளித்ததும் 
அந்த இறைவன்தான் என்பதை 
மனிதர்கள் மறந்துவிடுகிறார்கள் 
இறைவனின் துணையின்றி எந்த 
செயலும் முற்றுபெறுவதில்லை 

பிறரின் வாழ்க்கையை சுரண்டி 
ஆடம்பரமாக வாழ்ந்த அரசர்கள், 
சர்வாதிகாரிகளின் பரிதாபகரமான
முடிவுக்கு ஆளான  நிலையை 
ஒரு கணம் சிந்தித்து 
பார்போருக்கு உண்மை விளங்கும்

அதர்மம் பெருகும்போதுதான்
இயற்கை சீற்றங்கள் வருகின்றன 
மனிதர்களை திருத்த வரும் 
அந்த நிகழ்வுகளை எதிர்த்து மனித
குலம் ஒன்றும் செய்ய முடியாது

இறைவனை குற்றம் சொல்வதை விடுத்து
இனியாவது தர்மத்தின்படி வாழ்வை 
அமைத்துகொண்டால் நன்மை விளையும்

இல்லாவிடில் அடி விழத்தான் செய்யும் 
அதை தடுக்க முடியாது 

இனியாவது ஆதிக்க போக்கும் 
பொய்யும் சுயநலமும் 
ஒழியட்டும் .இவ்வுலக மக்கள் 
ஒருவரோடு ஒருவர் அனைத்து 
வேறுபாடுகளையும் 
மறந்து   அன்பினால் இணையட்டும்  


இறைவன் படைத்த எதுவும் அழிவதில்லை
அணுக்களின் கூட்டமாய் விளங்கும் 
எந்த பொருளும் ஒரு வடிவத்தை 
எடுத்து கொள்ளுகிறது
அந்த வடிவம் சிதைந்ததும் 
அது வேறொரு 
வடிவத்திற்கு மாறுகிறது 
இதுதான் உண்மை 

மாற்றம் என்பது இறைவன் வகுத்த விதி 
அதை மாற்ற எந்த கொம்பனாலும் முடியாது.
எனவே இந்த குழப்பங்களுக்கெல்லாம் 
மனதில் இடம் கொடாமல் நம் கடமைகளை 
ஒழுங்காக செய்து, ஒழுக்கமாக வாழ்ந்து 
பிறருக்கு துரோகம் செய்யாமல் 
அனைவர் மீதும் அன்பு செய்து நம்மை 
படைத்த இறைவனை நினைந்து கொண்டு
வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையும் 
ரசிக்கும் .அதற்கு பிறகும் இனிக்கும் 

No comments:

Post a Comment