Sunday, January 22, 2012

சுத்தம்தான் கடவுள்

சுத்தம் சோறு போடும் 
சுத்தமின்மை 
உடலை கூறு போடும் 

சுத்தம் சுகத்தை தரும் 
சுத்தமின்மை 
சோகத்தைதான் தரும்

சுத்தம் இன்பம் தரும் 
சுத்தமின்மை 
துன்பம்தான் தரும்  

சுத்தம் தரும் 
பரிசு நல்வாழ்வு 
சுத்தமின்மையால் 
தரிசாகும் நம் வாழ்வு 

சுத்தத்தை மறந்துவிட்டது
இன்றைய உலகம்
நஞ்சாகிவிட்டது மண்ணும்
நீரும்  காற்றும் ஆகாயமும் 
புறவுலகில் எங்கு நோக்கினும் துன்பம் 
அனைவர் நெஞ்சிலும் வஞ்சம் 
பெருகிவிட்டது சுயநலம் 
அனைத்தும் தனக்கே என்கிறார் 
அகந்தை கொண்டோர் 

விளைவிக்கும்  
உணவுபொருளோ தாராளம் 
ஆனால் உணவு கிடைக்காது 
மடியும் மக்களோ ஏராளம் 

நோய் தீர்க்க மருத்துவர்கள் பல இருந்தும் 
நோய் தீராது மடிபவர்கள் ஏராளம் 

உள்ளத்தில் சுத்தமில்லை 
செய்கையில் நேர்மையில்லை 
பிற உயிர்களிடத்து அன்பில்லை 
அதனால் மனதில் 
யாருக்கும் அமைதியில்லை

 உயிரற்ற பொருட்களை நாடி ஆயுள் 
முழுவதும் நாய் போல் அலைகின்றார்
சேர்த்த பொருளை பாதுகாக்கவே 
அந்த பொருளில் ஒரு பகுதி செலவு செய்கின்றார்
தன் தேவை போக மிகுதியை இல்லாதவருக்கு 
அளிக்க மறுக்கின்றார் 

முதுமை வந்து சேர்த்த பொருளை அனுபவிக்காது 
மரணம் வந்தபின் வேதனையுடன் உயிர் துறக்கின்றார்
மீண்டும் பேயாய் இவ்வுலகில் தான் சேர்த்து வைத்த 
சொத்துக்களை சுற்றியே திரிந்து அல்லபடுகின்றார்
செல்வத்து பயன் ஈதல் என்பதை 
வாழ்வில் கடைபிடிக்காமையால்
பலர் அமைதியை நாடி 
அங்குமிங்கும் ஓடுகிறார் 
கைளில் உள்ளதனைதையும் 
விட்டுவிட்டு 

தன்னிடத்து உள்ளதை
இல்லாதவரிடம் பகிர்ந்து கொண்டால் 
துன்புறுவோரின் துயர் துடைத்தால்
அனைத்துயிர்கள் மீதும் 
அகந்தையின்றி அன்பு செய்தால் 
கிடைக்கும் மன அமைதி என்பதை 
என்றுதான் அறிந்து கொள்வாரோ 
இம்மனிதர்கள் 

சுத்தம்தான் கடவுள் 
புறவுலகில் மட்டுமல்ல 
அகவுலகிலும் சுத்தம்தான்  கடவுள் 

2 comments:

  1. "அகவுலகிலும் சுத்தம்தான் கடவுள்"

    அருமை ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  2. நன்றி.வருகைக்கும் ,கருத்துக்கும்

    ReplyDelete