Friday, January 20, 2012

என் மனம் இறைவனை நோக்கி
செல்ல மறுக்கிறது அது ஏன்?

நம் மனம் எப்போதும் புலன்கள் தரும் 
இன்பங்களையே நாடி வெளியில் 
சென்று கொண்டிருப்பதால் 
 நமக்குள் உறையும் ஆன்மாவாகிய 
இறைவனை அது அறிந்துகொள்ள 
முயற்சிப்பதில்லை 

நாம் புறவுலகில் இன்பங்கள் என்று
 நினைத்து கொண்டிருப்பதெல்லாம்
 உண்மையான இன்பங்கள் அல்ல 
என்பதை நாம் நம் மனதிற்கு புரிய வைக்க வேண்டும் 
.புற உலகில் உள்ள பொருட்களால்தான் 
இன்பத்தை பெற இயலும் என்றால் 
அது எப்போதும் என்னிலையிலும் இன்பத்தை தர வேண்டும். 
இனிப்பு பண்டங்கள் ஒரு மனிதனுக்கு 
 இன்பத்தை தரும் ஒரு பொருளாக இருப்பினும் 
அதுவே அவனுக்கு நஞ்சாக மாறி 
அவன் உயிரை கொன்றுவிடும் அவனுக்கு நீரிழிவு நோய் வந்தால்
 
அழகிய பெண்ணின் உடல் மீது தோன்றும் இன்பம் 
அப்பெண்ணில் உடல் நோய் கண்டோ அல்லது 
வயதாகி முதுமையடைந்தாலோ அக்கணமே 
அகன்றுவிடுவதைபோல் புற இன்பங்கள் நிலையற்றவை
 என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்
  .
அதைபோல்தான் பெண் ,பொன், மண் ஆகிய அனைத்தும் 
.இதிலிருந்து இன்பம் என்பது பொருட்களில் அல்ல
 ,புலன்களின் மூலம் பெறும் இன்பம் உண்மையல்ல,
என்பதை மனதிற்கு புரிய வைக்க வேண்டும். 
பொருட்களின்மீது வைக்கும் பற்றை 
சிறிது சிறிதாக விட்டு விலக வேண்டும்.
 
உண்மையில் நாம் வெளிஉலகில் பெறும் இன்பம்
 என்பது நம் உள்ளத்தில் உறையும் 
ஆன்மாவிலிருந்து பெறப்படும் இன்பமே அன்றி
 வெளியுலகில் பெறப்படுவது அன்று 
என்று பகவான் ரமணர் நமக்கு தெளிவுபடுதியிருப்பதை 
உணர்ந்துகொண்டால் நமக்குள் உண்மையான 
,என்றும் அழியாத, நிரந்தரமான, திகட்டாத பேரின்பத்தை 
அறிந்துகொள்ள முற்படுவோம்

பகவான் ரமணர் காட்டிய வழியில் 
ஆத்ம விசாரணை செய்து வந்தால்
 நமக்கு உண்மை புலப்படும்
பிறகு எந்நிலையிலும் மாறாத 
தெய்வீக இன்பத்தை அடைந்து
 இவ்வுலகிலேயே மகிழ்ச்சியாக வாழலாம். 

No comments:

Post a Comment