Wednesday, March 6, 2013

ஸ்வாமி சிவானந்தரோடு ஒரு நாள்


ஸ்வாமி  சிவானந்தரோடு  
ஒரு  நாள்  

யார்  மகான் ?








ஸ்வாமியின்  முன்னிலையில்
சத்சங்கம்  நடந்து  கொண்டிருந்தது

வயதில்  பெரியவர்  ஒருவர்
 தன்  மகனுடன்  அங்கு  வந்தார்

காலில்  செருப்புடன்
அறைக்குள் நுழைந்துவிட்டார்

உடனே  அவர்  மகன்
தன்  தந்தையிடம்  செருப்பை  
வெளியிலேயே  விட்டுவிடவேண்டும்
என்று  நினைவுபடுத்தினான்

உடனே  பெரியவர்  திரும்பி
செல்ல  எத்தனித்தார்

இதை  சுவாமி  சிவானந்தர்
கண்டுவிட்டார்  .

உடனே  அவர்  அந்த  பெரியவரை
 பார்த்து  பரவாயில்லை  வாருங்கள்
நாற்காலியில்  அமருங்கள்
செருப்புக்களையும் போட்டுக்கொள்ளுங்கள்

.ஏனென்றால்  நாம்  அனைவருமே
இந்த  நாற்றம் பிடித்த  உடம்பாகிய
செருப்பை  நாம்  எங்கு  சென்றாலும்
போட்டுக்கொண்டேதான்  போகிறோம் .

அந்த  பெரியவரின்  கண்களிலிருந்து
நன்றி  பெருக்காக  கண்ணீர்
வழிந்தோடியது

தான்  செய்த   செயலுக்கு
தன்   மீது  கோபம்   கொள்ளாமல்
அன்போடு  தன்னை  வரவேற்றது
அவரது  உள்ளத்தில்  அந்த
மகானை  பற்றி  விவரிக்கமுடியாத
மதிப்பும்  மரியாதையும் எழுந்தது .

 என்  முதிய  நிலை  கருதி  என்  மீது
எவ்வளவு  கருணை  காட்டியிருக்கிறார்
என்று  மனம்  நெகிழ்ந்து போனார் .

ஆனால்  வாழ்க்கையில்
 நம்மில்  பலர்   சின்ன  விஷயங்களுக்காக
மற்றவர்கள்  மனதை  புண்படுத்துவதும் ,
கேவலமாக  பேசுவதும்   ,மீண்டும்
 மீண்டும்  வாய்ப்பு  கிடைக்கும்  போதெல்லாம்
அதையே  பலர்  முன்னிலையில்
 நினைவுபடுத்தி  அசிங்கப்படுத்துவதும்
போன்ற  செயல்களை  செய்து  வருகிறோம் .

இது  போன்ற  மகான்களின்  வாழ்க்கையில்
நடைபெற்ற  சம்பவங்களை  நினைவு  கூர்ந்து
நம்மை  நாம்  பண்படுத்தி  கொண்டால்
நம்  வாழ்வு  சிறக்கும்

(தகவல் -சுவாமி  ஸ்வரூபானந்தா )

4 comments:

  1. சிறு தப்பு என்றாலும் தப்பு தானே...

    ReplyDelete
    Replies
    1. அவரவர் மனதில் உள்ள
      எண்ணங்களை பொறுத்தது

      தப்பு செய்யாதவர் யார்?

      ஏதோ ஒரு சிலர்
      அகப்பட்டுகொள்கிறார்கள்

      பலர் தப்பி விடுகிறார்கள்.

      செய்த தப்பை பெரிதுபடுத்தாமல்
      மன்னித்து விடுவது அரிய பண்பு.

      ஒவ்வொருவரும் தப்பு செய்துவிட்டு
      எப்பாடியாவது அகப்பட்டுகொள்ளாமல்
      இருக்கவேண்டும் என்று
      கடவுளிடம் வேண்டிக்கொண்டு
      அதன் பிறகு தப்பு செய்யாமல்
      எச்சரிக்கையாய் இருப்பவர்களும் உண்டு.

      செய்த தப்பை மறைக்க
      பல தப்புகளை தொடர்ந்து செய்து
      மீளா சிக்கலில் மாட்டிகொண்டு
      அவஸ்தைப்படுவதும் உண்டு,

      துறவிக்கழகு பிறர்
      குறை பொறுத்தல்.

      சுவாமி சிவானந்தர்
      பொறுமைக்கடல்

      பிறர் மனம் புண்படாது
      ஆன்மீக செல்வத்தை
      மக்களுக்கு எளிமையாக
      இனிமையாக போதித்த மகான்.

      Delete
  2. வாழ்க்கையில்
    நம்மில் பலர் சின்ன விஷயங்களுக்காக
    மற்றவர்கள் மனதை புண்படுத்துவதும் ,
    கேவலமாக பேசுவதும் ,மீண்டும்
    மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்
    அதையே பலர் முன்னிலையில்
    நினைவுபடுத்தி அசிங்கப்படுத்துவதும்
    போன்ற செயல்களை செய்து வருகிறோம் .//


    வாழ்க்கை என்ற நீரோடையை அசுத்த படுத்துவதே இந்த செயல் தான் நன்றாக சொல்லிருக்கறீர் மனதை புடம் போட உங்களுக்கு வருகிறது

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கை என்ற நீரோடை வற்றிபோகாமல்
      இருக்க வேண்டுமென்றால்
      அதில் நல்ல சிந்தனைகள் என்னும்
      வண்டல் மண்ணை போட்டு
      நிரப்பிக்கொண்டே இருக்கவேண்டும்.
      அப்போது ஓடையின் அடியில் நீர்
      எப்போதும் வற்றாது
      சுரந்துகொண்டே இருக்கும்,
      சுவையான, இனிமையான நீரை
      பருக தந்துகொண்டே இருக்கும்.

      Delete