Monday, February 3, 2014

சொன்னதை செய்பவன் யார்?

சொன்னதை செய்பவன் யார்?

சொன்னதைச்
செய்பவன் யார்?

சொன்னதைச்
செய்தவன் யார்?



இரண்டும் ஒருவனே
அவனால் மட்டும்தான்
அது முடியும்.

அவனை முழுவதுமாக
உணர்ந்தவர்களால்
மட்டும்தான் அது முடியும்

அவன் போதித்த அறிவுரைகளை
எந்நேரமும் நெட்டுரு போட்டு
ஒதுபவர்களால் முடியுமா?
நிச்சயம் முடியாது.

ஏனென்றால்
அது அவ்வளவு
எளிதான காரியமல்ல

அவனைக் கண்டு தரிசிக்கும்
பாக்கியம் பெற்ற தேவர்களாலும்,
தெய்வங்களாலும்
கூட அவன் சொன்னதைச்
செய்ய முடியாது.



அவன் போதித்ததை
உணர்ந்து கொள்ள முடியாது.



ஏன் எப்போதும் அவனுடன்
இருந்து கொண்டிருக்கும்
அத்தனை பேருக்கும் கூட
அவன் போதித்த தத்துவத்தை
உணர முடியாது.

உணரமுடியவில்லை.
அவர்களும் உணர
முயற்சி செய்யவில்லை.

ஏனென்றால் இன்னும் அவர்கள்
அவர்களாகவே இருப்பதினால்தான்

அப்படி அவர்களை மாயையில்
மயக்கி வைத்திருக்கிறான் அவன்.

அப்படி என்ன தத்துவத்தை
அவன் சொல்லிவிட்டான்?

அதைத்தொடர்ந்து சிந்திப்போம்.

இன்னும் வரும்.



2 comments: