Saturday, December 3, 2011

இந்த உலகத்தில் எதற்காக பிறக்கிறோம்?

இந்த உலகத்தில் எதற்காக பிறக்கிறோம்?
ஒரு குறிப்பிட்ட காலம் வாழ்ந்து மரிக்கிறோம்
இந்த இடைப்பட்ட காலத்தில்தான் எத்தனை குழப்பங்கள்
இறைவன் நாம் கேட்காமலேயே நமக்கு வேண்டியதனைதையும்
நாம் இன்பமாக வாழ அளித்துள்ளான்
ஆனால் நம் ஏன் அவன் தந்தஇன்பங்களை அனுபவிக்காமல்
துன்ப கடலில் மூழ்கி கிடக்கிறோம் ?
எல்லாம் இருந்தும் அதை முழு திருப்தியுடன்
அனுபவிக்காமல் இல்லாததை நினைத்து
ஏங்குகிறோம்?
நம்மால் ஒரு அளவிற்குமேல் எதையும்
அனுபவிக்கமுடியாது என்று தெரிந்தும்
பிறரின் சொத்துக்களை அபகரித்து ஏன்
மற்றவர்களின் மகிழ்ச்சியை கெடுக்கிறோம்?
எல்லாவற்றிற்கும் காரணம் நம்முடைய சுயநலம்தான்
அந்த தீய அக்குணம் நம்மை விட்டு போகும்வரை
நாமும் நிம்மதியாக இருக்கமுடியாது
மற்றவர்களும் நிம்மதியாக இருக்க முடியாது
இறைவா நீதான் உன் படைப்புகளுக்கு
நல்ல குணத்தை அருள வேண்டும்

No comments:

Post a Comment