Sunday, December 18, 2011

தண்ணீருக்காக கண்ணீருடன் அலையும் மக்களே

சிந்தனைக்கு சில வரிகள்

எந்த பிரச்சினைக்கும் கூட்டம் சேர்த்து 
கூப்பாடு போடாதீர்கள் 
கூப்பாடு போட்டு முடிந்த பின்
கூட்டம் கலைந்து விடும் 
எந்த பிரச்சினையும் தீராது 

கூட்டமாக இணைந்து இறைவனை 
நோக்கி வழிபாடு செய்யுங்கள்
உங்கள் பாடும் தீரும் 
பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் 

ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீர் 
பிரச்சினையை தீர்த்துவைப்பது
அரசியல்வாதிகளோ நீதிமன்ற தீர்ப்புகளோ அல்ல
வருண பகவான்தான் தீர்த்துவைக்கிறான் 
என்பதை புரிந்து கொள்ளுங்கள்

தண்ணீருக்காக கண்ணீருடன் அலையும் மக்களே 
இறைவன் ஆண்டுதோறும் வெள்ளமென மழையை 
அளவின்றி அளிக்கிறான்
அதை சேமித்து வைத்துகொள்ள வழியின்றி 
கடலில் விட்டுவிட்டு அண்டை மாநிலங்களுடன் 
சண்டையிடுவதால் யாருக்கு பயன்?

இறைவனிடம் தூய உள்ளத்துடன்  மன்றாடுங்கள் 
அவன் எல்லா பிரச்சினைகளையும் நிரந்தரமாக 
தீர்த்து வைப்பான்
 .
மனிதர்களை நம்பாதீர்கள்
அவர்களின் உள்ளம் சுயலமும் உள்நோக்கமும் 
கொண்டு மாசடைந்துள்ளது
நம் அரசுகள் அதேபோன்ற உள்ளங்களை கொண்ட
மனிதர்களால் ஆக்கப்பட்டுள்ளது
அதனால்தான் எந்த பிரச்சினைக்கும் அவர்களால் தீர்வு
காணமுடியவில்லை
.
அனைவருக்கும் நல்லஉள்ளம் அமைய வேண்டும் என்று 
தினமும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்

தூய உள்ளம் கொண்டவர்களால்தான் அனைவருக்கும்
நன்மை பயக்கும் செயல்களை செய்ய முடியும்  


  

No comments:

Post a Comment