Saturday, December 10, 2011

வாழ்க்கை வாழ்வதற்கே! ஆம் அதுவும் இன்பமாக வாழ்வதற்கே

வாழ்க்கை வாழ்வதற்கே!
ஆம் அதுவும் இன்பமாக வாழ்வதற்கே

இன்பமாக இருப்பதுதான் நம் ஆன்மாவின் இயல்பு
ஆனால் நடப்பது என்ன?

இறைவன் நாம் அனைவரும் இவ்வுலகத்தில் இருக்கும் வரை
சுகமாக,மகிழ்ச்சியாக வாழவே அனைத்து வசதிகளையும்
இலவசமாகவே வழங்கியுள்ளான்

ஆனால் இன்று உலகில் பெரும்பாலானோர் இறைவன்
அனைவருக்கும் வழங்கிய வசதிகளை தங்களுக்கு
மட்டும்தான் என கருதி சுயநல எண்ணத்துடன் பிறருக்கு
சேரவேண்டிய தனைத்தையும் தங்கள் ஆதிக்கத்தை
செலுத்தி அபகரித்துகொண்டுவிட்டனர்

அதனால் கோடிகணக்கான மக்கள்
அடிப்படை வசதிகள்,சுகங்கள் உரிமைகளின்றி துன்பபட்டுகொண்டிருக்கின்றனர்
.
தன சுகம்,சுயனலதிர்க்காக பிறரை துன்புறுத்தும்
குணம் கொண்டவர்கள் அரக்கர்கள்

ஆனால் எந்த காரணமும் இல்லாமல்
 பிறரை துன்புறுத்தி கொடுமை செய்து
கொலை செய்பவர்கள் ராஷதர்கள்

இவர்களை எதிர்த்து அழிக்க வேண்டுமென்றால்
 மக்களிடையே ஒற்றுமை வேண்டும்

ஜாதி,மதம்,மொழி,இனம்,நிறம்,ஏழை,பணக்காரன்,
என பல பிரிவுகளாக பிரிந்து,அறியாமைக்கும்,
மூட நம்பிக்கைகளில்,மது போதை,சிந்திக்கும்  திறமையின்மை ,அவநம்பிக்கை போன்ற தீய  குணங்களால் ஆட்பட்டு
மதி மயங்கி உள்ளவர்களால் என்ன செய்ய முடியும்?

உலகெங்கும் அவர்களின் போராட்டங்கள் நசுக்கபடுகின்றன.ஒடுக்கபடுகின்றன

இந்நிலையில் அனைவருக்கும் தங்களை
 காப்பாற்றிக்கொள்ள இருக்கும் ஒரே வழி
இறைவனின் பாதங்களை முழுமையாக சரணடைவதுதான்
.
பாற்கடலில்,பள்ளி கொண்ட அரங்கன்,குரங்கனோடு சேர்ந்துகொண்டு
ராம பிரானாக அவதரித்து அரக்கர்களை அழித்து நல்ல நிர்வாகத்தை மக்கள்
வாழ அளித்தான்

அவன் பதங்களை சரணடைந்தால்
 நம் அனைத்து துன்பங்களும் முடிவுக்கு வரும்.
ராமன் பரப்ரம்ம ஸ்வரூபம்.
அனைத்து கடவுள்களும் அவனின்
வெவேறு வடிவங்களே என்பதை உணர வேண்டும்.


No comments:

Post a Comment