Friday, December 2, 2011

உன் வேதனைக்கு பிறரை நிந்தனை செய்வதை நிறுத்து

இறைவா உன்னை நினைக்க முடியாமல்
துன்பங்களை அடுத்தடுத்து தருகிறாயே
துன்பங்களை மறக்க முடியவில்லை
துன்பங்களை பொறுத்துகொள்ளும் உடல் உறுதியோ
மன உறுதியோ இல்லை
ஒரு துன்பம் நீங்கினால் அடுத்த துன்பம்
வாசலில் தயாராக நிற்கிறது
உடலில் நோய் என்ற நிலை மாறி
உடலே நோயாக மாறிவிட்டதே
எல்லாம் இந்த உடல் மீது வைத்த
பற்றினால் விளைந்தது
இந்த உடலுக்குள் உள்ளத்திற்குள்
உறைந்து என்னை இயக்கும் உன் மீது
பற்று வைக்காமல் வந்த வினைதான் இது
மனமே இனியாவது உன் கவனத்தை
இறைவன் மீது செலுத்து
உன் துன்பங்கள் குறையும்
அவன் நாமத்தை உச்சரி
அந்த நாமத்தின் நாதத்தின் மீது
சிந்தனையை செலுத்து
உன் வேதனைக்கு பிறரை நிந்தனை
செய்வதை நிறுத்து
வேதனைகள் குறையும்
வாதனைகள் நீங்கும்
பயிரை காக்கும் மழை போல்
உயிருக்குயிரான இறைவன்
உண்மையான பக்தனை காப்பான். .

No comments:

Post a Comment