Friday, January 6, 2012

பராசக்திக்கு விண்ணப்பம்




கலைத்தாயே 
...
கலைத்தாயே என்  அறியாமை  களைந்திடவே 
அருள்  செய்வாய் கலைவாணியே  

அறியாபொருளை  அறியும்  அறிவை 
 எனக்கு  நிறைவாய்  தந்திடுவாய்  
அறிவு  தெய்வமே  அபிராமியே 

கலையை  விலையாக்கும்  கற்றவர்கள்  
மத்தியில்  நிலையாய்  நிமிர்ந்து  நிற்க்கும்வழியை 
எனக்கு காட்டிடுவாய்  வடிவுடை  அன்னையே 

நிலையான  பதம்  தேடி  வழி  நாடும் 
எனக்கு பழி  தீண்டா  வழி காட்டிடுவாய் 
அகிலாண்டேஸ்வரி  தாயே 

வெளி  சென்று  வெளிச்சம்  தேடுமெனக்கு 
உட்சென்று  தானே  ஒளிருமொளியைகாணும் 
வழியை  கற்பிப்பாய்  கற்பகவல்லியே 

பிழை  செய்தே  பிழைப்பை  தேடுமென்னை 
பிறருக்கு  நலம்  செய்தே நானுயரும்மார்க்கம் 
உணர்த்துவாய்  பிரமராம்பிகையே 

பிறர்  உயர்வு  கண்டு  பொறாமை  கொண்டு  
பொறுமும்  மக்களிடையே  மற்றவர்
 உயர்வு கண்டு அகமகிழும்பாங்கினை 
அளிப்பாய் ஆனந்த வல்லியே

அனைதுயிர்க்குமஅன்பு  செய்து ஆனந்தம்
அடையும்  பாதையை  விட்டு  
பழியை  தரும்  பாவ  வழியில்  
சென்றிடாமல்  என்னை  
காத்திடுவாய்  பரமேஸ்வரியே

பூக்குவியலின்நடுவில் கருநாகம்  
புகுந்து  உயிருக்கு  ஆபத்தை  விளைவிக்கும்
சில மனிதர்கள் போல் என் உள்ளத்தில் 
புகுந்துவிட்ட தீய எண்ணங்களை அகற்றி 
என்னை காத்திடுவாய் நாகேஸ்வரியே

இன்பத்தை  கண்டு இறுமாப்பு  அடையாமலும் 
துன்பத்தை  கண்டு துவண்டுவிடாமலும் 
செல்வம்   வந்தபோது  செருக்கடையாமலும் 
எந்நிலையிலும்  அறவழிவிட்டு  நீங்காமலும் 
எக்கணமும்  உன்  திருவடி  நினைவு  மறவாமலும் 
கண்ணின்  இமை  போல்  என்னை காப்பாய் 
கருமாரி தாயே


அனைத்துமாய்  இருப்பவளே 
அனைத்தையும் இயக்குபவளே  
அஞ்ஞானத்தை  அழிப்பவளே 
ஆனந்தத்தின் ஊற்றே
ஆதிபராசக்தியே


சற்றே  என் கோரிக்கையை  செவி  மடுப்பாய் 
இந்த  உடலைவிட்டு  உயிர்  நீங்குமுன்னே 
தயாபரியே 

2 comments: