Tuesday, January 17, 2012

எந்நிலையிலும், அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது எப்படி?


எதற்க்காக பிறந்தோம் இவ்வுலகில் ?
எதை அடைய பிறந்தோம் இவ்வுலகில் ?


நாம் தாங்கி வந்த உடல்தான் அழியும்.
ஆனால் நம் மனதில் உள்ள எண்ணங்கள் என்றும் அழியாது
அது செயலாக மாறி முடிவு பெறும் வரை

அதனால்தான் நல்ல எண்ணங்களை
 நாம் வளர்த்து கொள்ளவேண்டும்.
நல்லவர்களின் கூட்டுறவை நாடி பெற வேண்டும்
தீய எண்ணங்களை தீ போல் கருதி தள்ளியே நிற்க வேண்டும்

நாம் முற்பிறவியில் விட்டு சென்ற பணிகளை
தொடரவே மீண்டும் பிறக்கிறோம்

சிலர் தமக்கு தீங்கு செய்தவரை பழி வாங்கவே மீண்டும் மீண்டும் பிறக்கின்றனர் 

சிலர் கடந்த பிறவியில் செய்த தவறுகளை
திருத்திக்கொண்டு அடுத்த பிறவியில்
நன்மைகள் செய்து நல்லதொரு
 நிலையை அடைய பிறக்கின்றனர்


பிறப்பதற்கு முன் முன்பு வரை நம் நிலை என்ன?
இறந்தபின் நம் நிலை என்ன?

நமக்கு எல்லாம் உண்டு உடலைத்தவிர
நாம் செய்த நல்வினைகளும், தீ வினைகளின் பதிவுகளும்,
ஆசைகளும் எல்லாம் நாம்மோடு இருக்கும்


உறக்கத்தில்,மயக்க நிலையில்
எல்லாம் மறைந்து போய்விடுகின்றனவே,அது எப்படி?
உறக்கம் வருவதே தெரியாமல்  வருகிறதே?
அதேபோல் விழிப்பதும் விழித்ததும் அனைத்தும் நினைவில் வந்துவிடுகின்றனவே அது எப்படி?

அதுதான் இறைவனின் மாயை
மாயையிலிருந்து விடுபட அவரவர் மன முதிர்ச்சிக்கு
ஏற்ப ஞானம் பெறும் வழிகளை நாட வேண்டும்

அப்படியானால் நாம் காண்பதனைத்தும்
செய்வதனைத்தும் நம் நினைவுகளில்தானா ?
அவைகள் யாவும் உண்மையில்லையா?


ஆம் அனைத்தும் நம் நினைவுகளில்தான் நடக்கிறது
என்ற உண்மையை நம்மால் அறியமுடியாது
நாம் யார் என்று உணரும் வரை

சில சமயங்களில் மட்டும் கனவுகள் ஏன் வருகிறது?
கனவில் எல்லாம் உண்மைபோல் தோன்றுகிறது
விழித்தவுடன் பொய்யாகிவிடுகிறதே அது ஏன்?


நம் மனதிற்கு மூன்று நிலைகள் உள்ளன
ஆழ்ந்த உறக்க நிலை கனவு,விழிப்பு

ஆழ்ந்த உறக்க நிலையில் உடல் உட்பட
அனைத்தும் இருக்கும் ஆனால் எதுவும்
நினைவில் இருக்காது .மனதின் செயல்பாடு
முற்றிலும் அடங்கியிருப்பதால்
கனவுகளும் இல்லை ,விழிப்பும் இல்லை

கனவு நிலையில் மனம் மட்டும் செயல்படும்
விழிப்பு நிலையில் மனமும் உடலும் செயல்படும்
ஆனால் உண்மையில் நாம் விழிப்பு நிலை
என்று நினைத்து கொள்வது
உண்மையில் விழிப்பு நிலை அல்ல
அது ஒரு நீண்ட கனவு அவ்வளவுதான்

உண்மையில் விழிப்பு நிலை என்பது ஆழ்ந்த உறக்கம்
,கனவு, நீண்ட கனவு ஆகிய நிலைகளையும் தாண்டி 
அனைத்தையும் சாட்சியாக நின்று பார்க்கும் ஒரு உணர்வு

அந்த நிலையை அடைய நாம்
பகவான் ரமண மகரிஷி காட்டிய 'நான் யார்'
என்று அவர் அருளியுள்ள அறிவுரைப்படி
முயற்சி செய்தால் அந்த நிலையை
அடையமுடியும். அடைந்தால்
அவரைபோல் நாமும்
 அந்த தெய்வீக ஆனந்தத்தை பெறமுடியும்


உண்பது,இரை தேடுவது,உறவு கொள்வது,சண்டையிடுவது போன்ற விலங்குகள் செய்யும் வேலையை தான் மனிதர்கள்
தினமும் செய்துவருகின்றனர் சிந்திக்கும் வேலையை தவிர


ஒரு சிலர் மட்டும் வேறு விதமாக செயல்படுகின்றனரே அது ஏன்?

கோடிகணக்கான மனிதர்களிடையே
ஒரு சிலர் மட்டும் இவ்வுலகில் தங்கள் சுவடுகளை விட்டு செல்கின்றனர்
மற்றவர்களின் சாம்பல்  கூட நிற்பதில்லையே அது என்?

பிறருக்கு தீங்கு செய்வதையே தொழிலாக
கொண்டுள்ளனர் பல பேர் அது ஏன்?

எதற்கெடுத்தாலும் கவலைப்படுவதே
வாழ்வின் கொள்கையாக வைத்துள்ளனரே பலபேர் அது ஏன்?

பலர் எப்போதும் துன்பத்திலேயே ஆழ்ந்துள்ளனர் அது ஏன்?

சிலர் எல்லாம் இருந்தும் மகிழ்ச்சியாக இல்லையே அது ஏன்?
ஒரு சிலர் எதுவும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கின்றனரே அது எப்படி?

தங்கள் மீதுள்ள குறைகளை காணாது பிறர்மீது குறைகளை கண்டு அனைவரையும் வேதனைபடுத்துவதையே தங்கள் வாழ்வின் குறிக்கோளாய் மனிதர்கள் பலபேர் வைத்திருப்பது ஏன்?

எந்நிலையிலும், அமைதியாகவும்  மகிழ்ச்சியாகவும் இருப்பது எப்படி?

மேற்கண்ட காரணங்களை  மனதில் வைத்து மீண்டும் மீண்டும் சிந்தித்தால் இந்த துன்பங்களிலிருந்து விடுபடும் வழியை மனம் நாடும். நல்லதொரு குருவை நாடினால் வழி பிறக்கும்.


நாடாவிடில் என்றும் துன்பமே
மனித பிறவியில் மட்டும்தான் இது சாத்தியம். 
இப்போது கிடைத்த இந்த வாய்ப்பை விட்டுவிட்டால் 
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் மனித பிறவிக்காக 
காத்தி ருக்கவேண்டுமோ?


அதை அந்த இறைவனே அறிவான் 


2 comments:

  1. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. பதிவை பார்வையிட்டு கருத்தை
    பதிவு செய்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete