Saturday, January 21, 2012

புத்தரின் அவதாரம் எதற்கு?

புத்தரின் அவதாரம் எதற்கு?

இறைவனை உணருவதற்கு 
இவ்வுலக ஆசைகளை விடவேண்டும் 
ஆசைகள்தான் அனைத்து 
துன்பங்களுக்கும் காரணம் 
என்று புத்தர் வலியுறித்தினார் 

இறைவனை திருப்திபடுத்த
உயிர்களை பலியிடுவது தவறு 
என்பதை வலியுறுத்த 
அஹிம்சையை 
கடைபிடிக்குமாறு போதித்தார்

புலனடக்கம்தான் நம் மனதை 
ஒருமைபடுத்தி இறைவனை 
உணர வழி வகுக்கும் 
என்பதை வலியுறித்தினார் 

துன்பங்களை சகித்து கொள்ளவேண்டும் என்றும்
எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும் 
என்றும் மரணம் உயிர்களை எப்போது 
வேண்டுமானாலும் கொண்டு சென்றுவிடும் என்றும் 
அதற்காக வருந்துவது கூடாது என்பதையும் 
வலியுறித்தினார். 


ஆனால் அவர் இறைவனை பற்றி
எங்கும் தன்னுடைய கொள்கைகளில் 
குறிப்பிடவில்லை  

ஆனால் அவர் மறைவிற்கு பின்
அவர் கொள்கைகள் 
காற்றில் விடப்பட்டன 

மாறாக அவர் உருவத்தையே சிலைகளாக
வடித்து அவரையே கடவுளாக
வழிபடதொடங்கி  விட்டனர் 

அவர் காட்டிய அன்பு வழி ,பிற உயிர்க்கு தீங்கு செய்யாமை 
போன்ற உயர்ந்த கொள்கைகளை புத்த மதத்தை 
பின்பற்றுபவர்களால் கடைபிடிக்கபடவில்லை 

அவர் வலியுறித்திய புலனடக்கம் தற்காப்பு 
கலை பயில்பவர்களுக்கு மட்டும் பயன்படுகிறது. 

2 comments:

  1. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  2. பதிவை பார்வையிட்டு கருத்தை பதிவு
    செய்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete