Wednesday, December 25, 2013

ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆராதனை - (26.12.13)

ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆராதனை - (26.12.13)

இன்று சத்குரு, அருணாச்சல மகான்
ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் ஆராதனை தினம்.




சித்த புருஷராய் ,அருணாச்சலேஸ்வரர் மீது
அபரிமிதமான பக்தி கொண்ட பித்தராய்
காமாஷி  அன்னையின் அருள் நிறைந்த
அழகு வடிவமாய்திகழ்ந்தவர்

நாற்பது ஆண்டுக்காலம் அருணையிலே
வாசம் செய்து அங்கேயே அடங்கிவிட்ட
மாபெரும் யோக புருஷர்

தவத்தில் மூழ்கியிருந்த
மகரிஷி ரமணரை இவ்வுலகிற்கு
கண்டெடுத்து காத்து
நமக்களித்த கருணை வள்ளல்

களங்கமற்ற அன்போடு
காலடியில் வீழ்ந்தவர்களை
கருணையோடு கைதூக்கி
அபயமளித்து காத்த
அம்பிகையில் புதல்வன்

எத்தர்களையும், ஏமாற்றுக்காரர்களையும்,
ஓட  ஓட விரட்டிய மகான்

அவரை சோதிக்க நினைத்தவர்களை
வீதிக்கு செல்லவைத்தவர்

வணங்கியவர்களின்
வறுமையை ஓட்டிய கற்பக தரு

தீராத நோய்களையும்
தீர்த்து வைத்த தன்வந்திரி பகவான்

இன்றும் அவரை நினைத்து
வழிபடுவோரின் வினைகளை வேரறுத்து
வளமான வாழ்வை அளிப்பவர்.

அவர் மிகவும் போற்றி
பரவியது ராமநாமம்

அவரைப் போற்றி பணிவோம்.
இராம நாமம் சொல்லுவோம்.
இந்த ஜன்மம் கடைத்தேற

திருவண்ணாமலையில் அவர் அடங்கிய
திருக்கோயிலில் ஆராதனை
விமரிசையாக நடக்கும்


வாழ்வில் ஒரு முறையாவது
அங்கு சென்று பணிந்தால் நம்மை
வாட்டும்வினைகள் காணாமல் போய்விடும்
அந்த மகானின் கருணையினால் .

முடியாதவர்கள் மாடம்பாக்கத்தில்
தேனுபுரீஸ்வரர் கோயில் அருகில்
அமைந்துள்ள சித்தர் கோயிலுக்கு
சென்று வழிபட்டு உய்யலாம்.




ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

2 comments:

  1. இன்று சத்குரு, அருணாச்சல மகான்
    ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் ஆராதனை தினம்.

    நல்ல தகவல். நல்ல பதிவு. ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே நமஸ்காரங்கள். படங்கள் திறக்க மறுக்கின்றன. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சுவாமிகளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் திறக்கும்

      Delete