Monday, December 23, 2013

அன்ன தானத்தின் மகிமைகள். (தொடர்ச்சி)

அன்ன தானத்தின் மகிமைகள். (தொடர்ச்சி)

ஆமாம் மகிமைகள் இருக்கு!

.அதில் என்ன சந்தேகம்?

அதிதி தேவோ பவ



அதிதிகளை இறைவனின் வடிவாக எண்ணி
அவர்களுக்கு திருப்தியுடன் அமுது செய்யவேண்டும்
என்பது சாஸ்திரம்.

தலைமுறை தலைமுறையாக
தொடர்ந்து வரும்
நம்முடைய வாழ்க்கைமுறை.

அதனால்தான் வள்ளுவர் சொன்னார்.
அறத்தால் வருவதே இன்பம் என்றார்

அவ்வைப் பாட்டியும்
அறம் செய விரும்பு என்றாள்

வள்ளுவன் மேலும் சொன்னான்.
செல்வத்து பயன் ஈதல் என்றான்

மற்றொன்றும் சொன்னான்
ஈதல் மட்டும் போதாது, இசைபட வாழ்தல் என்றான்
அதுதான் ஒருவன் உயிரோடு வாழ்வதற்கு இலக்கணம்

உண்டி கொடுதோர்
உயிர் கொடுத்தோரே !

உயிரைக் கொடுக்கும் சக்தி
அதை எடுக்கும் சக்தி உள்ள இறைவனுக்கு மட்டும்தான் உண்டு.

ஆனால் நமக்கும் அந்த சக்தியை
அவன் வழங்கியுள்ளதை நாம் உணர்ந்து
பயன்படுத்திக்கொள்ளவேண்டும்

அதுதான் பசித்தோரின் உடலின்
உயிர் தங்குவதற்கு அன்ன தானம் செய்வது

வள்ளலாரும்  மற்றும் அனேக மகான்களும்
அன்ன தானத்தையே முக்கிய தானமாக கருதுகிறார்கள்.

ஞானானந்தகிரி   சுவாமிகளும்
அன்ன விசாரத்திர்க்குப் பிறகுதான் ஆத்ம  விசாரம் என்றார்.

For the hungry the GOD will apear in the form of bread
என்பார் சர்வபள்ளி ராதாக்ருஷ்ணன்

இறைவன் பிறரை வசைபாட
மனிதப்பிறவி அளிக்கவில்லை

அனைவரையும் வாயார வாழ்த்தி,
இறைவனை நெஞ்சார நினைந்து
வாழ்த்தத்தான் மனிதப்பிறவி.

அதன்படி வாழாதவர்கள்
மனித உடல் எடுத்த இழிபிறவிகள்

பாவத்தை தொலைக்க பரிகாரங்கள்
செய்ய  பல ஆயிரங்கள் செலவிடுகிறோம்

பரிகாரங்களுக்கு செலவழிக்கும்
காசை அன்ன தானம் செய்து பசிப்பிணி
அகற்றினால் எல்லா பாவங்களும் ஒழியும்.
தனி தனியாக பரிகாரங்கள் செய்ய வேண்டியதில்லை.

செய்யாதவர்களை மலைமேல்
 நின்றுகொண்டு ஏழு பிறவிகளிலும்
கண்கானிததுகொண்டு வருகிறான் அந்த மலையப்பன்

பெரிய  நெருக்கடிகள் கொடுத்து
அந்த கடிகள் தாங்காமல் அவர்களை
தங்களிடம் உள்ள அனைத்தையும்
மூட்டை கட்டிக் கொண்டு வந்து
அவன் உண்டியலில் போடும்படி செய்து
அதை அன்ன தானத்திற்கு பயன்படுத்தி
அவர்கள் போன்ற கருமிகளையும் காப்பாற்றுகிறான்.



உணவை வழங்குபோது
அவர்களின் தோற்றத்தை கண்டு
எள்ளி நகையாடக்கூடாது

அவர்களை இழிவாகப் பேசக்கூடாது
அவர்களை கடிந்து பேசக்கூடாது

அவர்களை தடிமாடாக இருக்கிறாயே,
உழைத்து சாப்பிடக்கூடாதா என்று
சொல்லிக்கொண்டே உணவு வழங்கக்கூடாது.

அவர்களிடையே
பேதம்  காணக்கூடாது.

அன்னதானம் செய்பவர்களை தடுக்கக்கூடாது
அவர்களை பழிக்கக்கூடாது.

நாம் எப்படி சுவையாக சாப்பிடுவோமா
அதைப்போல்தான் பிறருக்கும் அளிக்கவேண்டும்.



ஒர வஞ்சனை செய்யக்கூடாது.
கெட்டுபோன உணவுகளை அளிக்கக்கூடாது

இப்படியெல்லாம் செய்தால்
அன்னதானம் செய்த பலன் கிடைக்காது

மாறாக அப்படி செய்பவர்கள்
அடுத்த பிறவியில் திருவோட்டை ஏந்தும்
கோஷ்டியில்  நிற்க வேண்டிய நிலையை
இறைவன் கொடுத்துவிடுவான்.

அன்னத்தை வீணடிக்கக்கூடாது
அவ்வாறு செய்பவன் அதே பிறவியிலே
அன்னம்கிடைத்தும். உண்ண முடியாத நோய்க்கு ஆளாவான்

இன்று உலகில் கோடிக்கணக்கான
மக்கள் உண்ண உணவின்றி துன்புறுகின்றனர்.

ஒருபக்கம் கோடிக்கணக்கான மக்கள்
வயிறு சம்பத்தப்பட உபாதைகளினால் உண்ண உணவிருந்தும் உண்ண முடியாமல் மருந்துகளையும் மாத்திரைகளும்   உண்டு வாழ்வைத் தொலைக்கின்றனர்.

இவை எல்லாம் அன்னத்தை பழித்ததினால்
வந்த வினை. என்பதை அவர்கள் உணரவேண்டும்.

இல்லாவிடில் அடுத்தடுத்து பிறவிகளில்
வறுமையில் வாடி உணவு கிடைக்காமல்
அல்லல் படுவதை தவிர்க்க முடியாது.
pic ciutesy-google images. 

2 comments:

  1. ஒர வஞ்சனை விளக்கம் இன்னும் விரிவாக பதிவு இடவும்...

    நன்றி ஐயா...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஆஹா, அன்னதானத்தின் சிறப்பினையும், அதை எவ்வாறு சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்பதையும் வெகு அழகாகச் சொல்லி உள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    http://gopu1949.blogspot.in/2013/12/100-1-2-3-of-3.html
    ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா சொன்ன அன்னதான மஹிமை நிறைவுப்பகுதியைக் காண வாங்கோ.

    ReplyDelete