Saturday, December 3, 2011

அதிகம் படிக்க படிக்க வீண் கர்வமும் படிக்காதவர்களை அவமதிக்கும் குணமும் அதிகரிக்கும்

கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் தம்மையும்
இந்த உலகையும் படைத்த ஒருவனை
இறைவன்என்று நம்புகிறார்கள்
இறை நம்பிக்கை இல்லாதவர்கள் என்று தங்களை
கூறிகொள்ளும் நாத்திகர்கள் கூட தங்களுக்கு
புரியாமல் இருக்கும் விஷயங்களை இயற்க்கை என்று
பெயர் சூட்டி மக்களை குழப்புகின்றனர்
அறிவுடையவன் அவனை பற்றி
அறிந்து கொள்ள பல சாத்திரங்களை
படித்து பல வழிகளில் இறைவனை புரிந்து
கொள்ள கடும் முயற்சிமேற்கொள்ளுகிறான்
அவனுக்கு குழப்பம்தான் முடிவில் மிஞ்சுகிறது
ஏனென்றால் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு வழியை கூறுகின்றன
ஒரு சாத்திரம் கூறும் வழியை மற்றொரு
சாத்திர ஆசிரியர் ஏற்றுகொள்ளமறுப்பதுடன்
கண்டிக்கவும் செய்கின்றார்
அதனால் ஒவ்வொரு முறையையும்
பரிசீலித்து பார்ப்பதிலேயே அவன் வாழ்க்கை முடிந்துவிடுகிறது
பலபுராணங்களை இயற்றிய வியாச பகவானே
மன அமைதியின்றி பகவான் கண்ணனின் லீலைகளை
விவரிக்கும் பக்தி இலக்கியத்தை இயற்றி
மன அமைதி அடைந்தார்.என்பது உண்மை
சாத்திரங்களை வாழ்நாள் முழுவதும் படித்துகொண்டிருப்பதில்
யாதொரு பயனும் இல்லை
அதிகம் படிக்க படிக்க வீண் கர்வமும்
படிக்காதவர்களை அவமதிக்கும் குணமும்
அதிகரிக்கும் அதனால் ஆன்மீகத்தில்
எந்த முன்னேற்றமும் ஏற்ப்படாது
ஏதாவதொரு வழியை பின்பற்றி நம்பிக்கையுடன்
மன உறுதியுடன் இறைவனை அடைவதற்கு
முயற்சி செய்பவனே வெற்றி காண்கிறான்
பாமரர்கள் அவன் மீது கள்ளமற்ற உள்ளத்துடன் பக்தி செய்து
மிக சுலபமாக அவன் அருளை பெற்றுவிடுகின்றனர்
என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன

2 comments:

  1. "அதிகம் படிக்க படிக்க வீண் கர்வமும் படிக்காதவர்களை அவமதிக்கும் குணமும் அதிகரிக்கும்"
    அப்படி வீண் கர்வமும் படிக்காதவர்களை அவமதிக்கும் குணமும் வருவதற்கு ஏன் படிக்க வேண்டும்? அது முழுமையான கல்வியே அல்ல.
    நம்ம தளத்தில்:
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

    ReplyDelete
  2. eppadiyaavathu paditthal nanru .Pinbu vaazhvil adipattu thiruntha vaaippu kidaikkum

    ReplyDelete