Friday, December 30, 2011

உண்மை என்பது கடவுள்

உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்
உண்மை பிறப்பதில்லை
உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்
ஒன்றும் நடப்பதில்லை

என்ற வரிகளை சீர்காழி கோவிந்தராஜன்
பாடியதை அந்த கால ரசிகர்கள்
மறந்திருக்க மாட்டார்கள்

ஆனால் இன்று உலகில் என்ன நடக்கிறது?

உள்ளம் ஒன்று நினைக்கிறது
உதடு ஒன்று சொல்கிறது

வீட்டிற்குள்ளும் அதே நிலைமை
வெளியிலேயும் அதே நிலைமை

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பொய் சொல்லுகிறார்கள்
பல நேரங்களில் உண்மை பேசும் குழந்தைகளை பொய் சொல்ல சொல்லி
கட்டாயபடுத்துகிரார்கள் இல்லை கட்டாயபடுத்தபடுகிரார்கள்

இதனால் தூய மனதுடன் இவ்வுலகிற்கு வந்த குழந்தையின் உள்ளம்
கெடுகிறது

பிறகு அது பொய் சொல்லுவதை தன இயல்பாக கொண்டு விடுகிறது

பெற்றோர்களின் இந்த கொடுஞ்செயல் அவர்களுக்கு எதிராகவே
பிற்காலத்தில் முடிகிறது

இதனால் வீட்டிற்குள்ளும் வீட்டிற்கு வெளியேயும் பொய்தான் ஆட்சி செலுத்துகிறது

உண்மைக்காக வாழ்ந்த ஹரிச்சந்திரன் இருந்த இந்நாட்டில் அவன் வாழ்ந்த நெறியை கடைபிடிக்க சமீப காலத்தில் முயற்சி செய்தவர் மகாத்மா காந்தி

அது அவரோடு போய்விட்டது

உண்மை என்பது கடவுள் 
கடவுள் என்றால் உண்மை 
இரண்டையும் பிரிக்கமுடியாது

அவ்வாறிருக்க உண்மை பேசாமல்,
உண்மை நெறியை கடைபிடிக்காமல்
கடவுளை அடைவது என்பது
சாத்தியமற்றது என்பதை
கடவுளை நோக்கி
வழிபாடு செய்யும் மனிதர்கள்
உணரவேண்டியது அவசியம்

வரும் புத்தாண்டிலாவது
உண்மை நெறியை இயன்றவரை
கடைபிடிக்க முயற்சி செய்தால்
உள்ளத்தில் அமைதி பிறக்கும்

அமைதியை நாடி எங்கும்
செல்லவேண்டிய அவசியமும்
இருக்காது 

  

3 comments:

  1. நான் சொலதெல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறொன்றுமில்லைன்னு கோர்டுல சத்தியம் வாங்குறாங்களே, அதுவும் இதுவும் ஒண்ணா?

    ReplyDelete
  2. ஆம் நண்பரே
    ஆனால் அங்கும் பலர் உண்மையை
    மறைத்து உதட்டால் பொய் சத்தியம் செய்து
    எல்லோரையும் ஏமாற்றுவதாக நினைத்துகொண்டு தங்களையே ஏமாற்றிகொள்கின்றனர்

    ஒருநாள் உண்மை வெளிச்சதிற்கு வரும்போது
    அவர்கள் வாழ்வு இருண்டுபோகும்
    வாழ்க்கை தடம் புரண்டு போகும்
    .
    ஆனால் ஒவ்வொரு மனிதன் உள்ளே
    மன சாட்சியாக இருக்கின்ற உண்மை என்ற கடவுள் அவனை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுவிடும்

    நீதிபதியை ஏமாற்றலாம்
    .
    வேங்கடாச்சலபதியையோ,,உமாபதியையோ
    கணபதியையோ
    இன்னும் எந்த பெயரில் கடவுள் என்றுஎதையெல்லாம் நாம் நினைத்து வணங்கி கொண்டிருக்கிரோமோ
    அவரை என்றும் ஏமாற்றமுடியாது என்பதை
    மூடர்கள் உணருவதில்லை

    கோயில்களில் சிலையாய் நின்று கொண்டிருக்கும் தெய்வத்தை வணங்குவது போல் பிறரை நம்ப வைத்து ஏமாற்றினாலும் அவன் உள்ளம் என்ற கோயிலில் நின்று கொண்டிருக்கும்
    தெய்வம் அவனை தண்டிக்காமல் விடாது.

    இதை நாம் இந்த உலகத்தில் கண்கூடாக பார்த்திருந்தும் மூடர்கள் திருந்துவதில்லை

    ReplyDelete
  3. "அமைதியை நாடி எங்கும்
    செல்லவேண்டிய அவசியமும்
    இருக்காது"

    100/100 உண்மை! நன்றி நண்பரே!
    தங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
    அன்புடன் அழைக்கிறேன் :
    "மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"

    ReplyDelete