Tuesday, July 23, 2013

GuruPoornima-22-7-2013

GuruPoornima-22-7-2013

GuruPoornima-22-7-2013

Guru"s Blessings to all






எல்லாம் இருந்தும்
அதை நினைந்து மகிழாது
எதையோ தேடி
ஓடுகிறது பொல்லா மனம்

இருப்பதைக் கொண்டு சிறப்புடன்
வாழும் வகையறியாது
இல்லாததை நினைந்தே
ஏங்கி தவிக்குதே இந்த
கள்ள மனம்

இறைவன் நம்முளே இருப்பினும்
அவனை புறத்தே தேடி,ஓடி
நாடி தளர்ந்துவிட்டதே
குருநாதா ! நான் என்ன செய்வேன்?

இறைவன் வருவான்
மனித வடிவில் என்றார்
அவனை உணர்ந்த ஞானிகள்

குருவே பிரம்மனும்,
குருவே மாலும்
குருவே மகேஸ்வரனும்
குருவே பரப்ரம்மனும்
என்றால் நீதான்
இறைவன் வடிவில்
எங்களின்  அஞ்ஞானத்தை
போக்க வந்த ஒளியன்ரோ!

குருபூர்ணிமாவான இந்நாளில்
உன் தாள் பணிகின்றோம்
எங்கள் மனம் அமைதியுற்று
இறைஅருளை பெற்றிடவே
வாழ்த்திடுவாய்

4 comments:


  1. மனம் அப்படித்தான்... சிறப்பிற்கு நன்றி...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. குருவே சரணம்.

    அழகாக எழுதியுள்ளீர்கள் அண்ணா. பாராட்டுக்கள்.

    நேற்று ஏன் குரு தரிஸனம் செய்ய வரவில்லை, அண்ணா? இன்று வருவீர்கள் என குரு என் சொப்பணத்தில் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது. அப்படியே நடக்கட்டும்.

    VGK

    ReplyDelete
    Replies
    1. இவனும் தன் குருவை
      தரிசனம் செய்ய சென்றுவிட்டான்

      Delete