Tuesday, July 30, 2013

இன்று ஆடி கிருத்திகை முருகப்பெருமானுக்கு உகந்த நாள்

இன்று ஆடி கிருத்திகை 
முருகப்பெருமானுக்கு உகந்த நாள் 






















வாழ்வில் ஆடாத ஆட்டமெலாம் ஆடி
நாடியெல்லாம் தளர்ந்து போகுமுன்னே
நாடுவீர் மால்மருகன்
முருகப்பெருமானின்
திருவடிகளை

முருகனுக்குகந்த இந்நாளில் நம்
உள்ளத்தில் புகுந்துகொண்டு
நம்மையெல்லாம்
ஆட்டிவைக்கும்
காம குரோத பேய்களை
அவன் திருநாமத்தை
உட்கொண்டு
விரட்டியடிப்போமாக

துன்பமும் துயரங்களும் நம்மை
பற்றாதிருக்க முருகனின்
திருவடிகளை பற்றிக்கொண்டு
அனைவரும் உய்வோமாக

அற்ப பலன்களுக்காக
அழியும் மனிதர்களின் புகழ்
அனுதினமும் பாடி அலைந்து
திரிவதை விட்டுவிட்டு
அகிலாண்டகோடி ப்ரம்மாண்டநாயகனை
அரோஹரா !அரோஹரா!என்று
புகழ்ந்து திருப்புகழ் பாடி
இகபர சுகங்களை
அடைந்து மகிழ்வோமாக






வினைகள் நம்மை பற்றாது
கோள்கள் நம்மை சுற்றாது
இன்பம் நம்மை  விட்டு அகலாது
மரணம் என்றும் நம்மை அணுகாது
மாயை நம்முன் நில்லாது
மனமே நீ என்றென்றும்
முருகனின் திருவடிகளை விட்டு
அகலாது நின்றால்

ஓம் சரவணபவ 

5 comments:

  1. நல்ல கருத்துக்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

    ஓம் சரவணபவ

    ReplyDelete
    Replies
    1. சச்சிதானந்த ஸ்வரூபன்
      சரவணபவன் முருகன்

      மலைமேலும் இருப்பான்
      அடியார் மனங்களிலும் இருப்பான்

      அவனை நினைத்து
      உருகுவோர்க்கு
      அனல்மேலிட்ட மெழுகாகி
      அருள் செய்வான்

      அவனை நினையாது அசட்டையாய்
      இருப்போர்க்கு அகப்படான்.

      அவன் நாமம் உரைக்கும் நாக்கு
      இனிக்கும் அமிர்தம்
      அதற்க்கு பயன்படா நாக்கு
      எதற்கும் உதவா ஆலகால நஞ்சு

      Delete
  2. நேரம் கிடைப்பின் :http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Try-Training-Success.html

    ReplyDelete
  3. தாங்கள் வரைந்துள்ள படங்களில் வேலும் மயிலும் முருகனும் முருகனைப்போன்றே அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.

    பகுதி-31 மட்டும் அண்ணாவின் வருகைக்காக ஏங்கிக்கொண்டு இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி VGK

      சில நாட்களாக
      பதிவொன்றும் போடவில்லை
      மனதில் ஏதோ
      இனம் புரியாத பாரம்

      ஆனால் முருகன் இன்று
      என்னை அழைத்தான்.

      உன் பாரத்தை சுமக்க நானிருக்கிறேன்
      என்பதை மறந்துவிட்டாயா என்றான்

      எனக்காக
      ஒரு பதிவிடு என்றான்

      என் கவலைகளை அவனிடம்
      விட்டு விட்டு பதிவிட்டேன்

      Delete