Thursday, August 22, 2013

முருகா வந்தருள் தருவாய் உன்னருள்

முருகா வந்தருள் 
தருவாய் உன்னருள் 





இவ்வுலகிற்கு எங்கிருந்து
வந்தேன் நானறியேன்

மீண்டும் எங்கு செல்வேன்
என்றும் நானறியேன்

உறக்கத்திலும் மயக்கத்திலும்
எங்கு சென்றேன்
என்பதையும் நானறியேன்

அன்றாடம் நடக்கும்
இச்செயல்கள்
ஆச்சரியத்தை
அளிக்குதையா முருகையா

அழியும் உடலின் மீது
அடக்கவொண்ணா
மோகம் ஒவ்வொரு கணமும்
அதனால் அடைந்தேன்
பல பல சோகம்

இன்பந்தனை தேடுகின்றேன்
இவ்வுடல்மூலம்
துன்பந்தனைதான்
பரிசாகப் பெற்றேன்

எத்தனைமுறை அடைந்துவிட்டேன்
கணக்கற்ற துன்பங்களை
இந்த உடல்மூலம்

இருந்தாலும் அதிலிருந்து
விடுபட மறுக்குதையா
கந்தையா இந்த பாழும் மனம்

என்ன செய்வேன்
 யாது செய்வேன்
இந்த நச்சு மனதின்
ஆசைகளிலிருந்து விடுபட்டு
மாறாத நிலைத்த இன்பம் பெற

சித்தரும், முத்தரும்
போற்றிப் பணியும் முருகா

பித்தராய் உன் புகழ் பாடி
திரியும் அடியவர்கள்
வணங்கும் வேலவா

என் போல் பக்தர்களுக்கும்
 எளிதில் இறங்கும்
தணிகைநாதா

என்னை விடுவிப்பாய்
உலக மாயையிலிருந்து
இவன் வேண்டுதலை ஏற்று.



5 comments:

  1. //என்ன செய்வேன் யாது செய்வேன் இந்த நச்சு மனதின்
    ஆசைகளிலிருந்து விடுபட்டு மாறாத நிலைத்த இன்பம் பெற //

    ஒண்ணும் செய்ய வேண்டாம். இந்தக்கீழ்க்கண்ட பதிவுக்கும் இதற்கு அடுத்து இன்று மதியம் வெளியாகும் இதற்கு அடுத்த பதிவுக்கும் கருத்துக்கூறினால் போதும்.

    http://gopu1949.blogspot.in/2013/08/39.htm

    என் மயில் மீது ஏறி உடனே பறந்து செல்லவும்.

    - By உங்களால் வரைப்பட்டுள்ள Lord Muruga

    ReplyDelete
  2. முருகன் வருவான்
    அருள் தருவான்

    ReplyDelete
  3. /// என்னை விடுவிப்பாய்
    உலக மாயையிலிருந்து... ///

    முருகா... உனது அருள் வேண்டும்...

    ReplyDelete