Tuesday, August 27, 2013

அன்றே சொன்னான் ஆயர் குல சிறுவன்

அன்றே சொன்னான் 
ஆயர் குல சிறுவன் 





ஆடையின்றி பொது இடத்தில் குளித்தல்
ஆபத்தை விளைவிக்கும் என்று அன்றே
சொன்னான் ஆயர் குல சிறுவன்

அப்படி செய்த மங்கையரின் ஆடைகளை
ஒளித்து   வைத்தான் அவர்களின்
தவறை  உணர  வைத்தான்

ஆண்கள் மட்டும்  ஆடையின்றி
திரிவது மட்டும் முறையோ
நாங்களும் ஆடையின்றி
திரிவோம் ஆட்டம் போடுவோம்
என்று பொது இடத்தில்
ஆர்பரிக்கின்றார்.அகிலம்
முழுவதும் பெண்கள் இன்று

ஆனால் ஆபத்தில் சிக்கி விட்டால் மட்டும்
கூப்பாடு போடுகின்றார். அவர்களுக்கு
பாதுகாப்பு இல்லை என்று.

அவர்களின் ஆட்டத்தை அணு அணுவாக ரசிக்கும்
காமக் கொடூரன்களும்  கூட்டமும் அவர்களோடு
சேர்ந்துகொண்டு கூச்சல் போடுகின்றார். நீதி கேட்டு

இன்று வீட்டிலும் பாதுகாப்பில்லை,
பொது இடத்திலும் பாதுகாப்பில்லை பெண்களுக்கு.
அது சிறு குழந்தையாயினும்
பருவமடைந்த மங்கையாயினும்,
வயது கடந்தவராயினும் காமகொடூரன்களின்
இச்சைக்கு  பலியாகும் கொடுமை அனுதினம்
 நடக்கும்  செய்தியாகிவிட்டது.

கடமையைச்  செய்
பலனை எதிர்பாராதே
என்றான் அன்று கண்ணன்

ஆனால் இன்றோ
கடமையை செய்வதற்கு
காசு கேட்கின்றார். தராதவர்கள் மீது
தரம் குறைந்த வார்த்தைகளை
அள்ளி வீசுகின்றார்
இந்த தரணியிலே



கண்ணா நீ படைத்த படைப்புக்கள்
எல்லாம்  தரம் தாழ்ந்து போய்விட்டன
உன்னையும் மறந்தனர்
உன் அறிவுரைகளையும் மறந்தனர்.
இன்று   அல்லல்படுகின்றனர்.

ஒழுக்கமும் இல்லை
ஒழுங்கும் இல்லை இவ்வுலகில்

வெளியிலும் புழுக்கம்
சுற்று சூழல் கெட்டதினால்

உள்ளத்திலும் புழுக்கம்
சுயநலமும் பொறாமையும்
நிறைந்து வழிவதனால்.

நீ படைத்த இந்த உலகை நீதான்
சரி செய்ய வேண்டும் ஹரியே
அனைவருக்கும் உன் அவதார திருநாளிலிருந்து
 நல்ல புத்தி பிறக்குமாறு வரம் தருவாயே.

pic. courtesy-google images 

2 comments:

  1. //நீ படைத்த இந்த உலகை நீதான் சரி செய்ய வேண்டும்.

    சரியே.

    //ஹரியே, அனைவருக்கும் உன் அவதார திருநாளிலிருந்து
    நல்ல புத்தி பிறக்குமாறு வரம் தருவாயே.//

    ஹரியே, இதுவும் சரியே.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete