Monday, December 30, 2013

ஹனுமத் ஜெயந்தி (1.1.2014)

ஹனுமத் ஜெயந்தி (1.1.2014)



Art-T.R.Pattabiraman 

அஞ்சனை மைந்தன் 
அடியவர்களின் நேயன் 

ஆற்றல் மிக்கவன்
ஆறுதல் தருபவன்

நெடியோனின் பக்தன் 
கொடியோரை வதைப்பவன் 

வாயு குமாரன் 
வாதை தீர்ப்பவன் 

புலன்களை வென்றவன் 
புகழ்ச்சிக்கு அடிமையாகாதவன் 

பணிவுடன் இருப்பவன்
துணிவுடன் செயல்படுபவன் 

அன்னை சீதையின் 
சோகம் போக்கியவன்

தன்னை நாடிவருபவர் 
ரோகம் நீக்குபவன் 

ராம நாமத்தை 
நெஞ்சினில் கொண்டவன் 

பஞ்சு போல் காற்றில் 
பறந்து கடலைக் கடந்தவன்  

வாலியின் தம்பிக்கு 
வாழ்வளித்தவன் 

வணங்குவோருக்கேல்லாம் 
வரங்களை அள்ளித் தருபவன் 

ஆதவன்போல் ஒளி வீசுபவன் 
முழு நிலவு போல் 
குளிர்ந்த பார்வையுடைவன் 

வாலையின் சக்தியை தன் 
வாலில் கொண்டவன். 

வாழ்த்தி பாடினால் 
வளம் கொண்ட
வாழ்வை அருள்பவன் 

காண்பார் யாரையும் 
கரம் கூப்புவான் 
அவர்களின் இதயத்திலே 
உறையும் 
ஆத்ம  ராமனை கண்டு 

புத்தியையும் தருவான்
சக்தியையும் தருவான் 
துணிவையும் தருவான் 

பயமற்ற வாழ்வும் தருவான் 
வாக்கு வன்மையையும் தருவான் 

அன்போடு அவன் நாமம் சொல்லி
பணிவோடு அனுதினமும் 
வழிபடுவோர்க்கே 

ஜெய் மாருதி 

7 comments:

  1. அருமை ஐயா... கைவண்ணம் பிரமாதம்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நாமக்கல் சென்று வந்த திருப்தி.
    "சுந்தரன்"சுந்தரமாக இருக்கிறார்.
    அருமை! நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் அந்த அஞ்சனை மைந்தனின் அருள்

      Delete
  3. //புத்தியையும் தருவான், சக்தியையும் தருவான் , துணிவையும் தருவான், பயமற்ற வாழ்வும் தருவான், வாக்கு வன்மையையும் தருவான் //

    ஆஹா, ஜெய் மாருதி !

    ஹனுமனின் படம் அழகாக கம்பீரமாக விஸ்வரூபமாக வந்துள்ளது. பாராட்டுக்கள் அண்ணா. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வலைப்பதிவில் வரும் அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் மாருதியின் அருள் வாழ்நாள் முழுவதும். பரி பூரணமாக கிடைக்க வாழ்த்துகிறேன்.

      Delete
  4. சுந்தரனின் அருளால், இறை நினைவோடு இராம ராம என்னும் திரு நாமம் உச்சரித்து,....தொடருகின்ற காலம் கழிய மனமுருகி வேண்டுவோம்!... புதிய ஆண்டில் எல்லாமும் பெற்று வாழ்ந்திட, இறைஞ்சுகின்றேன் இறைவனிடம்!

    ReplyDelete