Sunday, December 1, 2013

மூலாதார ஷேத்ரம் திருவாரூர்

மூலாதார ஷேத்ரம்
திருவாரூர் 

தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும்   இறைவா  போற்றி

சிவன் எப்படி   என்னாட்டவர்க்கும்  இறைவன்
ஆகமுடியும்  என்று சிலர்  கேட்பார்கள்

இவ்வுலகில்  உள்ள அனைத்து
 உயிரிரினங்களுக்கும்
அம்மையும்  அப்பனுமாக  விளங்குபவன்
ஈசன்  ஒருவனே !

அவனே  தாயுமாகிறான்
தந்தையுமாகிறான்
அனைத்துமாகிறான் .

அந்த  உண்மையைத்தான்
ஈசாவாஸ்ய  உபநிஷதம்
வர்ணிக்கிறது

திருவாரூரிலே
பிறக்க முக்தி என்பர்


ஆம் ! "நம் பாரத  புனித  திருநாட்டின்
புனித சூழ்நிலை  சிறப்புற  அமைந்ததற்கு  காரணமே
விண்ணில்   வாழும் தெய்வங்களும்  தேவர்களும்
இங்கு நேரில்  வந்து  பரம்பொருளோடு
ஒன்றிவிடுவதர்க்கான  தவத்தை  மேற்கொண்டன
மேற்கொள்ளுகின்றன .

இன்னும் தவம்  செய்துகொண்டிருகின்றன .

அனேக  தெய்வங்கள்  இந்த பூமியின்
மாண்பை  உணர்ந்துகொண்டு
இங்கேயே  தங்கி  இவ்வுலக  மக்களுக்கு
இகபர  சுகங்களை  அள்ளி  அள்ளி  தந்து
மகிழ்ந்து  கொண்டிருகின்றன
என்பது அறிவுடையோர்  அறிந்த உண்மை.

மூலாதார ஷேத்ரமான   இந்த  புனித  தலத்தில்
அன்னை பராசக்தியும்  ஆதார  பீடம்  கொண்டு
ஸ்ரீ  கமலாயதாஷியாக  அருள்  பாலிக்கிறாள்
.


இவளது  அளப்பரிய  சக்தி  தத்துவத்தை
தலைமை  சித்தராம்  அகத்தியப்பெருமான்

"வாயும்   மனமும்   கடந்த  மனோன்மணி
பேயும்  கணமும்  பொதுரைப்  பெண்பிள்ளை
வாயும்   அறிவும்  கடந்த  அரனுக்குத்
தாயும் மகளும் தாரமுமாமே
என்று போற்றிப் பணிகின்றார்

"சிவா சக்த்யா யுகத:யதிபவதி  சக்தஹ "என்று
ஆதி சங்கரர் கூறியபடி நம் அன்னை
பிரம்மத்தை தொழிற்பட
இயக்குவதால் தாயாகிறாள்

ஆனால் அப்படி இயக்கும் சக்தியை
 சிவனிடமிருந்தே பெற்றமையால்
மகளாகிறாள்

பின்னர் சிவ -சக்தியாய் சிவனுடன்
உறைந்து ஒன்றி நிற்கும்போது
தாரம் ஆகிறாள்.

அத்தகைய மூலாதார ஷேத்ரத்தில்
காமகலா சக்தியாக நம் அன்னை
காக்கும் சக்தியாகவே
எழுந்தருளியிருக்கிறாள்.

அம்பிகையின் திருவடிவத்தை வரையும்
பாக்கியம் இவனுக்கு  கிடைத்தது
பெரும்பேறு.

அவள் வடிவம் உங்களுக்காக

(இன்னும் வரும்)

7 comments:

  1. // பின்னர் சிவ -சக்தியாய் சிவனுடன்
    உறைந்து ஒன்றி நிற்கும்போது
    தாரம் ஆகிறாள்... //

    விளக்கம் அருமை ஐயா... வாழ்த்துக்கள்....



    http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    ReplyDelete
  2. அன்னையின் வடிவம் ஆனந்தமளிக்கிறது..!

    ReplyDelete
  3. "நம் பாரத புனித திருநாட்டின்
    புனித சூழ்நிலை சிறப்புற அமைந்ததற்கு காரணமே
    விண்ணில் வாழும் தெய்வங்களும் தேவர்களும்
    இங்கு நேரில் வந்து பரம்பொருளோடு
    ஒன்றிவிடுவதர்க்கான தவத்தை மேற்கொண்டன
    மேற்கொள்ளுகின்றன .

    சந்தோஷமானச் செய்திகள்.

    >>>>>

    ReplyDelete
  4. தவக்கோலத்தில் உள்ள அம்பாள் ஓரளவு நன்றாக வந்துள்ளது.

    என் அம்பாள் சொல்வதுபோல அன்னையின் வடிவம் ஆனந்தமளிக்கிறது. ;) பாராட்டுக்கள் அண்ணா.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்னையை வரைய
      பல ஆண்டுகள் முயற்சி செய்தேன்
      மனம் ஒருமுகப்படவில்லை .

      இவ்வாண்டுதான் ஒரே
      அட்டெம்ப்டில் வரைந்து முடித்தேன்.


      இரண்டு மாதம் ஆகியது .
      ஒவ்வொன்றையும்
      பார்த்து பார்த்து வரைந்திருக்கிறேன்

      படத்தை கூர்ந்து பொறுமையாக
      கவனித்தால் தெரியும் இந்த படத்திற்கு
      எவ்வளவு கவனம் செலுத்தியிருக்கிறேன் என்று.

      ஒவ்வொரு படத்தையும் அப்படிதான் கவனம்
      செலுத்தித்தான் வரைகின்றேன்

      I am not a trained artist .Out of my interest
      and by the grace of divine I draw pictures.

      படம் வரைவது இவனுக்கு
      ஒரு தவம் போல

      ஒரு கலைஞனுக்குதான் தெரியும்
      கலையின் அருமை,பெருமை.

      பார்ப்பவர்கள் பொறுமையோடு ரசிப்பதில்லை

      காரணம் ஒவ்வொருவருக்கும்
      எண்ணற்ற சிந்தனைகள் .
      முடிவில்லா பிரச்சினைகள் .
      எதிலும் மனமொன்றி அவர்கள்
      மனம் நிற்பதில்லை .
      இன்றைய உலக வாழ்க்கை
      சூழ்நிலை அப்படி .

      கடலில் அலைகள் என்றும் ஓயாது
      நாம்தாம் அலைகளோடு வாழும்
      வழியைக் கற்றுக்கொள்ளவேண்டும்
      .
      கோயிலில் சாமி பார்த்தேன்
      என்று கண்ணை மூடிக்கொண்டு
      இருட்டை பார்ப்பது போல்.

      இதுதான் முதல் முயற்சி

      இதற்கே VGK பாராட்டு கிடைத்துள்ளது
      மகிழ்ச்சி .
      (v)very (G) good (K) கலாரசிகர்

      தம்பிக்கு அம்பாள் என்றால்
      அண்ணனுக்கும் அவள் அம்பாளே
      அவளே பாராட்டியபின்
      வேறென்ன வேண்டும் இவனுக்கு

      Delete