Saturday, December 7, 2013

இவ்வுலகில் நடைபெறும் சம்பவங்கள் யாவும் நன்மைக்கே

இவ்வுலகில் நடைபெறும் 
சம்பவங்கள் யாவும் 
நன்மைக்கே 

இவ்வுலகில் நடைபெறும் சம்பவங்கள்
நம் மனதை பெரிதும் பாதிக்கின்றன.

ஆனால் நாம் அந்த சம்பவங்கள் யாவும்
இறைவனால் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகின்றன
என்பதை உணர்ந்த ஞானிகள்
 எந்த பதட்டமும் அடைவதில்லை.

 ஏனென்றால் இந்த உலகத்தில்  நடைபெறும்
 எந்த செயலுக்கும் ஒரு காரணம் உண்டு
 என்பதை நன்கு உணர்ந்தவர்கள் அவர்கள்.

நாமும் அதுபோன்ற நிலையை 
எப்படி அடைவது?

அதற்க்கு நல்ல  சத்சங்கம் வேண்டும்.
 சத்சங்கத்தில் இணைந்துகொண்டால்
 நமக்கு சிறிது சிறிதாக தெளிவு ஏற்படும்.


நம் நாட்டை பன்னெடுங்காலமாக
பல நாடுகளிலிருந்து படையெடுத்து வந்து
 இங்குள்ள விலை மதிப்பில்லா செல்வங்களை
கொள்ளை அடித்துக்கொண்டு சென்றுள்ளார்கள்.
இன்றும் பல்வேறு வழிகளில்  நாட்டு வளங்களும்
செல்வங்களும் சூறையாடிப் பட்டுக் கொண்டுதான்  வருகிறது,

 உலகெங்கிலும்பல போர்கள் நடந்தன.
பலகோடி மக்கள் மாண்டனர்.
இன்றும் போர்கள் உலகில் ஏதாவது
ஒரு நாட்டில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
மக்கள் அழிந்துகொண்டிருக்கிரார்கள்

இவை எல்லாம் தடுக்க முடியுமா?

நிச்சயம்  அந்த வல்லமையோ
அதிகாரமோ நமக்கு கிடையாது என்பதை
உணர்ந்துகொள்வதுதான் ஞானம்.

நமது சாஸ்திரங்களின்படி இந்த
உலகில் எதுவும் நிலையில்லை.
எல்லாம் அழிவுக்கு உட்பட்டவை.
நாம் எப்போது அழியாது இருக்கும்

இறைவனை மறந்து பொருட்கள் மீது
மோகம் கொண்டு அதை ஒரே இடத்தில்
 யாருக்கும் பயன்படாது  குவிக்க தொடங்குகிறோமோ
அப்போதெல்லாம் இறைவன் கொள்ளையர்களை
அனுப்பி  அவைகளை நம்மிடமிருந்து பறித்து
 நமக்கு பொருட்களின் நிலையாமையை உணர்த்துகிறான்.

அதுபோலதான் எப்போதெல்லாம்
 மக்கள் அகந்தையினால் அகந்தை கொண்ட ஹிட்லர்
போன்ற தலைவர்களை நம்பி  இறைவனை மறந்து
பிறர்  மீது ஆதிக்கம் செலுத்த தலைப்படுகிரார்களோ
அப்போதெல்லாம்
இறைவன் போரை உண்டுபண்ணி
அனைவரையும்  அழித்தொழிக்கிறான்

அவன் அன்றி ஒரே அணுவும் அசையாது என்று 
வெறும் வாயால் சொல்வதில் பயனில்லை. 

அதை நமக்கு இறைவன்உணர்த்தும்விதமாக நடத்தும்
மேற்கண்ட சம்பவங்களின் உண்மைத் தன்மையை
 புரிந்துகொண்டால் எந்த குழப்பமோ
அவர்கள் மீது வெறுப்போ வராது. 

4 comments:

  1. /// அந்த வல்லமையோ அதிகாரமோ நமக்கு கிடையாது என்பதை உணர்ந்துகொள்வதுதான் ஞானம்... ///

    அருமை... உண்மை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அவன் அன்றி ஒரே அணுவும் அசையாது

    அவன் ஒருவனே அழியாத அழிக்க முடியாத உண்மை பரம்பொருள்.

    எப்போதும் அவனை மட்டுமே நினைத்து, அவன் புகழ் மட்டுமே நாம் பாட வேண்டும்.

    அருமையான பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. பாராட்டுக்கு வாழ்த்துக்கு நன்றிகள்.VGK

    ReplyDelete