Thursday, July 11, 2013

அழகின் வடிவே அம்பிகையே

அழகின் வடிவே 
அம்பிகையே








அழகின் வடிவே
அம்பிகையே
வற்றாத கருணையின்  ஊற்றே
ஆனந்த வல்லியே

பாரினில் அரக்கர்களை
வதம் செய்து
அமைதியை நிலைநாட்டும்
உன் அருளைப்போல்
என் உள்ளத்தில் புகுந்துகொண்டு
என்னை துன்புறுத்தும்
காம க்ரோதாதி அசுரர்களை
அழித்து  என் உள்ளத்திற்கு
இதம் தருவாய்.

இரவும் பகலும்
மாறி மாறி வரும் இயற்கைபோல்
வாழ்வில் இன்பமும் துன்பமும்
மாறி வரும்

ஆனால் உன்னை என்
உள்ளத்தில் வைத்து
பூஜிக்கும்  எனக்கு
என்றும் மாறாத
இன்பம்தான் அன்னையே!

4 comments:

  1. வரைந்துள்ள படமும், பாடலும் ஆனந்தம் அளிப்பதாக உள்ளன.

    ஆனந்தவல்லி மிகவும் அழகான பெயர்.

    ஆனந்தம் .... ஆனந்தம் .... ஆனந்தமே !!

    [http://gopu1949.blogspot.in/2013/07/23.html க்கு வாங்கோண்ணா]

    ReplyDelete
  2. அருமை ஐயா...

    ஓவியம் எவ்வளவு நுணுக்கம்...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete