Thursday, January 16, 2014

அரவங்களே ஆபரணங்கள்


அரவங்களே ஆபரணங்கள்



அரவங்களை ஆபரணமாய்
அணிந்து காட்சி தரும்
ஆலவாய் அழகனே


ஆயிரம் நாவை உடைய
ஆதிசேஷன் அமைத்த
படுக்கையில் அரி துயில் கொண்ட
சேஷ சாயியே



நாகம் தன்னை
விரலில் நாகாபரணமாக
அணிந்து காட்சி தரும் பார்வதியே








நாகத்தை ஒட்டியாணமாக
தொந்தியில் அணிந்து
இன்புறும்  கணபதியே








ஐந்து தலை நாகம் குடை பிடிக்க
ஆனந்தமாக காட்சி
தரும் கருமாரியே



நஞ்சை  தலையில் கொண்ட
நாகத்திற்கு அந்த நஞ்சு தீங்கு
செய்யாதிருப்பதைபோல்
ஐம்புலன்களாகிய நாகங்கள்
என்னை தீண்டி
உன்னை மறந்திடச் செய்யாது
காத்திட அருளவேண்டும்



2 comments:

  1. உங்களால் மறக்கவே முடியாது ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //ஐம்புலன்களாகிய நாகங்கள் என்னை தீண்டி உன்னை மறந்திடச் செய்யாது காத்திட அருளவேண்டும்//

    ஆஹா, மிக அற்புதமான வேண்டுதல். நல்லதோர் படைப்பு. பாராட்டுக்கள் அண்ணா.

    ReplyDelete