Friday, January 31, 2014

அகந்தை என்னும் பேய்

அகந்தை என்னும் பேய் 

இவனுள் புகுந்துகொண்டு
இவனறியாமல் எதிர்பாராமல்
தலைதூக்கி நஞ்சைக் கக்கும்
நச்சுப்பாம்பு ஒன்றுள்ளது.

நயவஞ்சகமாய் இருந்துகொண்டு
நல்லவன் போல் நடித்துக்கொண்டு
நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமாய் வளர்ந்துகொண்டு
அழிக்கின்ற அரக்கன் அவன்

அன்பென்னும் இறைவனை
அடையவிடாது  செய்து நம்மை எல்லாம்
அதல பாதாளக் குழியில்
தள்ளும் அகந்தைதான் அவன்.

ஒவ்வொரு கணமும்
அவனால் படும்
இன்னலுக்கோர் அளவில்லை

மின்னல் போல் தோன்றிடுவான்.
நெடுநாள் பொன் போல் காத்து வந்த
மன அமைதியைக் நொடியில்
குலைத்திடுவான்

சிறியதோர் சொல் கிடைத்தாலும்
போதும் சீறி எழுந்திடுவான்
தீயாய் சினந்து அனைத்தையும்
அழித்திடுவான்.


















நாளெல்லாம்  அரங்கா ! அரங்கா!
என்று கூறிடினும்ஒரு கணம்
மறக்கும் நேரம் அவன் விரிக்கும்
வலையில் விழுவதேனோ?

அய்யகோ அவனால் நான்
படும் துன்பம் சொல்லிலடங்கா !

அரங்கா ! இவன் மீது கருணை
காட்டிடுவாய்.இக்கணம் முதல்
என் மனதில் பல பிறவிகளாய்
குடியிருக்கும் அகந்தை பேயை
அடித்து விரட்டிடுவாய்.
 .




3 comments:

  1. உண்மையை அழகாக சொன்னீர்கள் ஐயா...

    ReplyDelete
  2. தன்னுள்ளே தான் நோக்கும் வித்தை அறிந்த தாங்கள் அதை சீக்கிரம் கடந்து விடுவீர்கள் ஸார். கால் முக்கால்வாசி குணமாகி விட்டதா?

    ReplyDelete
  3. அய்யா இந்த அகந்தைப் பேய் ஓடுவதும், ஒளிவதும்,பதுங்குவதுமாய்
    இவனை ஏமாற்றி பாடாய்ப் படுத்துகிறது. பல பிறவிகளாய் என்னை உன்னோடு வைத்துக்கொண்டு சோறு போட்டு வளர்த்தாய். நீ என்னை விரட்டிவிட்டதாக நினைத்தாலும் நான் நீ அறியாதபடி வேறு உருவில் வந்து உன்னை தாக்குவேன் என்று சபதம் செய்திருக்கிறது.
    அதனுடன் போராடி வெற்றி காண முடியாது. ஆகையால்தான் அந்த பேயை விரட்டும்படி அரங்கனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
    கைத்தடி காலுக்கு உதவ வீட்டிற்குள் நடக்க முயன்றுகொண்டிருக்கிறேன்

    ReplyDelete