Wednesday, January 22, 2014

இன்றைய ஆன்மிகம்

 இன்றைய ஆன்மிகம் 

இன்று  ஆன்மிகம்
எப்படி இருக்கிறது?

என்னவிதத்தில்
பொருள் கொள்ளப்படுகிறது?

ஆன்மிகம்
என்றால் என்ன?



ஆன்மீகத்திற்கும்
கடவுளுக்கும்  என்ன சம்பந்தம்?

கடவுளுக்கும் கோயில்களுக்கும்
என்ன சம்பந்தம்?

கடவுள்
எங்கிருக்கிறார்?

கோயில்களில் மட்டும்தான்
கடவுள் இருக்கிறாரா?

மற்ற இடங்களில்
இல்லையா?

பிரம்மம்
என்றால் என்ன?

பிராம்மணன்
என்றால் யார்?

கடவுள் உயர்ந்த சாதிக் காரர்களுக்கு
 மட்டும்தான் சொந்தக்காரரா?

உயர்ந்தவன் என்று தன்னை நினைத்துகொண்டு
 மற்றவர்களை தாழ்ந்த சாதிக்காரன்
என்று பெயர் சூட்டப்பட்டவ்ர்களுக்கு
 கடவுள் அருள் செய்ய மாட்டாரா?

அதற்க்கு உயந்த சாதிக்காரன் தான்
இடைத்தரகர்களாக செயல்படவேண்டுமா?

அனைத்து மதத்தினருக்கும்
ஒரே கடவுளா?

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு
கடவுள் கிடையாதா?

பூஜை செய்தால் மட்டும்தான்
கடவுளைக் காணமுடியுமா?

ஆண்டில் ஒரு குறிப்பிட்ட  மாதம்
மட்டும் விரதம் இருந்து ஏதாவது
ஒரு குறிப்பட்ட இடத்தில உள்ள கோயிலுக்கு
சென்றால்தான் இறைவன் அருள் கிடைக்குமா?

உடலை வருத்திக்கொண்டு அபிஷேகம்,
இவற்றைச் செய்தால்தான் கோயிலில்
உள்ள கடவுள்கள் மனம் இறங்குமா?

அனைவரும் கூட்டமாகக் கூடி உரக்கப்
 பாடி துதித்தால்தான் இறைவன் மனம் இறங்குவாரா?

ஒரே கடவுளா இல்லை
எண்ணிலாக் கடவுள்களா?

ஒரு கடவுளை வணங்கிவிட்டு பிறகு
மற்றொருவர் பேச்சைக் கேட்டு
கட்சி மாறினால்  ஏற்கெனவே
வணங்கிய கடவுள் கோபித்துக்கொள்வாரா?

பிரார்த்தனை என்றால் என்ன?
அதை எப்படி செய்ய வேண்டும்?

யாரிடம் பிரார்த்தனை செய்யவேண்டும்?

இப்படி எண்ணற்ற கேள்விகள்
அனைவரின் மனதிலும் இருக்கும்
இல்லாமலும் இருக்கலாம்.

பலர் இதுபோன்ற கேள்விகளுக்கு
பலமுறை விளக்கம் தந்திருக்கிறார்கள்
இருந்தாலும் ஒருவருக்கும் விளங்குவதில்லை
உண்மையை ஏற்றுக்கொள்வதில்லை
பலர் உண்மையை ஏற்க விடுவதில்லை
பலர் உண்மையை திரித்து கூறி மக்களை
தங்களை  சார்ந்து வாழுமாறு செய்கின்றார்கள்.
பலர் மக்களை சிந்திக்க விடுவதேயில்லை.
இப்படியாக ஆன்மிகம்
படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது
என்பதே உண்மை 

தொடர்ந்து சிந்திப்போம்.



3 comments:

  1. தங்களால் எழுப்பபட்டிருக்கும் அனைத்து கேள்விகளுமே அருமை..
    பதில் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்..இவைகளைத்தான்
    பலகாலம் நானும் நினைத்து வருகிறேன்...வேத ஒலி கேட்டால்
    மனசுக்கு நிம்மதி...அந்த வேதம் படித்தவர்கள் மற்றவர்களை(வேறு
    ஜாதி மக்களை)புழு என நினைத்து ஒதுக்கும்போது மனசுக்கு சங்கடம்
    வருகிறது...கோவிலுக்கு போனாலோ ?????? பேசாமல் வீட்டில் இருந்தபடியே
    இறைனாமாவை சொல்லியபடியே இருக்கலாம் என்றாலும்...மனசு உறுத்துகிறது
    விளக்கத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்...

    ReplyDelete
  2. சிலர் சுயமாக சிந்தித்தாலும், பலர் சிந்திக்க விடுவதேயில்லை.... - இது தான் அப்பட்டமான உண்மை...

    ReplyDelete
  3. கேள்விகள் அனைவரிடமும் இருக்கின்றன என்றும் சொல்ல முடியாது. தேடுபவர்களுக்குத்தான் கேள்விகள் வருகின்றன. என்னைப் போன்ற தேடாதவர்களுக்கு மனதில் தோன்றுவதைச் செய்து, கண்ணில் பட்டதை வணங்கி மரமண்டைகளாக இருக்கிறோம்! :)))

    ReplyDelete