Thursday, August 2, 2012

செருப்புக்கு செருப்பா?

செருப்புக்கு செருப்பா?

ஆம் நாம் செருப்புக்கு செருப்பு போடுகிறோம்
எப்படி ?
நாம் இருக்கும் உடல் தோலால் மூடப்பட்டுள்ளது
ஆகையால் உடல் தோல் இல்லாமல் இயங்கமுடியுமா?
இல்லை நம் கால்கள் தோலால் மூடப்படாமல் இருந்தால் நடக்கத்தான் முடியுமா?

அப்படி இருந்தும் வீட்டை  விட்டு வெளியே செல்லவேண்டுமென்றால் கூடுதலாக தோல் செருப்புகளை அணிந்து கொள்கிறோம்.
வீட்டிற்குள் நுழையும்போது செருப்புகளை வீட்டின் வெளியே விட்டு விடுகிறோம்

அதைபோல் இறைவனை வணங்க கோயிலுக்குள் செல்லும்போதும் செருப்புகளை வெளியே விட்டுவிட்டு நாம் மனதினை மட்டும் துணையாக கொண்டு இறைவனை வணங்குகிறோம்

அதைபோல்தான் நம்முடைய இதயத்திற்குள் உறையும் இறைவனை நாம் வணங்க வேண்டுமென்றால் உடலின் போல் போர்த்தபட்டுள்ள இந்த தோலினால் ஆன உடலை மறந்துவிட்டு  மனதின் துணை கொண்டு இறைவனை அணுக வேண்டும் அணுகிய பின்பு மனம் உடல் இரண்டையும் மறந்து  இறைவனோடு ஒன்றி போக வேண்டும்

உலக தேவைகளுக்காக நாம் என்றும் இறைவனை
பிரார்த்திக்க வேண்டிய அவசியமில்லை 
ஏனென்றால் நாம் செய்யும்
நன்மை தீமைகளுக்கேற்ப்பதான் 
நமக்கு நன்மைகளும் வாழ்வும்  தானே அமையும்
நம் வாழ்வும் தாழ்வும் நம் கையில்தான் இருக்கிறது  

எனவே இறைவனிடம் வேண்டுதல்கள்  செய்வதை விடுத்து
இறைவனை மட்டும் வேண்டி பிரார்த்தனை செய்வதுதான்
உண்மையான வழிபாடு


   

1 comment:

  1. நல்ல ஒப்பீடு... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete