Monday, May 13, 2013

முகிலும் முகில் வண்ணனும்


முகிலும் முகில் வண்ணனும் 





















பரந்து கிடக்கும் வானிலே
பஞ்சு பொதி போல் பால் போல்
வெண்மை கொண்ட மேகங்கள்
ஆதவனின் ஒளியினிலே
அழகாய் தோன்றி நிற்கும்.

வெள்ளை நிற மேகங்கள் 
நமக்குணர்த்தும் 
பாடம் கேளீர் 

உள்ளம் வெண்மையாக இருந்தால் 
உள்ளம் லேசாகி வெள்ளை மேகங்கள் 
விண்ணில் மிதப்பதுபோல் 
நாமும் இன்பத்தில் மிதக்கலாம் 

நம் தலைமேல் பிரகாசிக்கும் 
ஜோதிஸ்வரூபனின் 
துணையோடு 

வெள்ளைமேகங்கள்
ஆதவனை மறைத்தால்
இவ்வுலகம் குளிரும்
கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு
நம்மையெல்லாம் வா வா என்று நம்மை அழைக்கும்
கண்ணனின் திருவடிவை கண்டால் நம் மனமும் குளிரும்.


யாதவனாக  இவ்வுலகில் வந்துதித்து
அனைத்துலகத்தையும்ஆட்கொண்ட
 அந்த  ஆதவனை, மாதவனை,மதுசூதனை
குழற்கற்றை முகத்தில் தவழ்ந்து
மயிர் பீலியுடன் குழலூதி அனைவரின்
உள்ளம் கவர்ந்து காட்சி தந்த
கருமைநிற கண்ணனை நாம்
கருமுகில் வண்ணனாகவல்லவோ
கண்டு வணங்குகிறோம்.

கணத்திற்கு கணம்  உருமாறும்
காட்சி காண்போர் மனதில்
களிப்பூட்டும்

காற்றினால் அசையும் மேகங்கள்
கலையும் சிலநேரம்
ஆங்காங்கே
பிரிந்து தனியாக மிதக்கும் மேகங்கள்
அதே காற்றினால் ஒன்று கூடும்  சிலநேரம்

நம் மனதிலே அங்காங்கே பொதிந்து 
கிடக்கும் ஆயிரமாயிரம் எண்ணங்கள்
காற்றினிலே வரும் கண்ணனின் 
கீதத்தை செவி மடுத்தால் ஒன்றாகி 
அவன்திருவடியை சரணடையும்  

ஆதவனின் ஒளியால்
ஒளிரும் மேகங்கள் போல்
யாதவனாகிய கண்ணனில் அருளால் தான்
நாம் உயிர் வாழ்கிறோம்.
என்ற எண்ணமதை சிந்தித்து
அவனை நினைத்து கொண்டு
நம் கடமைகள் செய்தால் போதும்.
அனைத்தும் சித்திக்கும்
இவ்வுலக வாழ்வும் தித்திக்கும்.


கண்ணனே கார்மேகமாய் வருகின்றான்
அமுதமென மழையை பொழிகின்றான்
அனைத்துயிரும் வாழ

அவனை நாம் மனதில்
இருத்திக்கொண்டால் போதும்

நம்மை வினைகள் வாட்டுவதை
நிறுத்தி கொண்டுவிடும்.உள்ளத்தில்
உற்சாகம் மழையென
பொழிய தொடங்கிவிடும்.



5 comments:

  1. உற்சாக மழை. அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. அழகு அருமை...

    வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் வாழ வைக்கும்
      வாழ்த்துபவரையும் சேர்த்து
      நன்றி

      Delete
  3. நம் மனதிலே அங்காங்கே பொதிந்து
    கிடக்கும் ஆயிரமாயிரம் எண்ணங்கள்
    காற்றினிலே வரும் கண்ணனின்
    கீதத்தை செவி மடுத்தால் ஒன்றாகி
    அவன்திருவடியை சரணடையும்
    /அற்புதம்// நன்றி ஐயா!

    ReplyDelete