Wednesday, May 29, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் 

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்
என்ற தலைப்பின் கீழ் அந்த மகான் இராமபிரான் மற்றும்
பல தெய்வங்களின் மீது தெலுங்கு மற்றும்

 வடமொழி கீர்த்தனைகள் இயற்றி பாடி பரவசமடைந்த
அந்த கிருதிகளின்பொருளை அனைவரும்அறிந்துகொண்டு
அந்த கீர்த்தனையை கேட்கும்போது உணர்ந்துகொண்டு
பயன் பெற வேண்டும்  என்ற நோக்கத்துடன் இதுவரை 50 கீர்த்தனைகளுக்கான விளக்க உரையை பதிவிட்டேன்.

இராம நாமத்தின் பெருமையையும் ,
இராம பக்தியின் மேன்மையையும் பறை சாற்றும்
இந்த விளக்கங்கள் குறிப்பாக ராம பக்தர்களுக்கு
பிடித்திருக்கும்  என்று நம்புகிறேன்.

என் கருத்துக்களை அமிர்த வர்ஷணி இதழில்
வெளியிட்டு அதை அனேக ராம பக்தர்களிடம்
கொண்டுசேர்த்த ஸ்ரீ ஆனந்த வாசுதேவன்
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை
தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வுலகில் எவ்வளவோ
கற்றறிந்த பண்டிதர்கள் மத்தியில் மற்றும்
மகான்கள் இருந்தபோதும்
இந்த எளியேனின் முயற்சிக்கு
தங்கள் ஊக்கத்தையும் ஆக்கத்தையும்
தந்து என்னை எழுத உற்சாகபடுத்திய
அனைத்து நல்ல பெருந்தன்மையான
உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த
வந்தனங்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ
அங்கெல்லாம் ஸ்ரீ ராம பக்த ஹனுமான்
பிரசன்னமாகி கேட்டு மகிழ்கின்றான்
துளசிதாசரின் வாழ்க்கை சரிதத்தில்
இந்த உண்மை உள்ளது.

ராம நாமத்தை மெய் மறந்து பாடும்
ஆஞ்சநேய சுவாமியின்  படம்
20 ஆண்டுகளுக்கு முன் வரைந்தேன்
அந்த படம் இதோ.






9 comments:

  1. அழகான அருமையான படம் ஐயா... வாழ்த்துக்கள்...

    ஸ்ரீ ஆனந்த வாசுதேவன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. //எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ஸ்ரீ ராம பக்த ஹனுமான் பிரசன்னமாகி கேட்டு மகிழ்கின்றான்//

    சத்தியமான வாக்கு.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஏனென்றால்
      இராம நாமம் சத்தியம்

      Delete
  3. //ராம நாமத்தை மெய் மறந்து பாடும் ஆஞ்சநேய சுவாமியின் படம். 20 ஆண்டுகளுக்கு முன் வரைந்தேன்//

    20 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இளமை ஊஞ்சலாடுபவராகவே இருக்கிறார்.

    கையால் வரையப்பட்ட படத்திற்கு அனுபூதி அதிகம் எனச்சொல்லுவார்கள். பாராட்டுக்கள்.

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆஞ்சநேய சுவாமிக்கு ஏது முதுமை?
      அவர்தான் சிரஞ்சீவிஆயிற்றெ?

      அதனால்தான் அவர் படமும்
      இளமை ஊஞ்சலாடுகிறது
      அதில் அதிசயம் ஒன்றுமில்லை

      கண்ணிலே அன்பிருந்தால்
      கல்லிலே தெய்வம் வரும்

      உள்ளத்திலே அன்பிருந்தால்
      உலகத்து உயிர்கள் மீதெல்லாம்
      அன்பு பெருகும்

      உண்மைதான்
      கையினால்
      படம் வரையும்போது
      ஐம்புலன்களும் அடங்கி
      வரையப்படும் தெய்வத்தின்
      நினைவில்
      ஒடுங்கிவிடும்.
      அதனால் அதில் சக்தி அதிகம்

      அதுவும் இந்த ராமநாம பரதேசி
      வரைந்த படத்தில் நிச்சயம் கொஞ்சமாவது
      அந்த சக்தி ஒட்டிக்கொண்டிருக்கும்.

      இதற்க்கு முன்பு இதே படத்தை கொஞ்சம்
      பெரிய அளவில் வரைந்து நங்கநல்லூரில் ஆதி வியாதிஹர ஆஞ்சநேயர் கோயில் கட்டும்போது அங்கு அந்த படத்தை கொடுத்திருக்கிறேன். ஆனால் அது எங்கு போயிற்று என்று தெரியாது.
      எனவேதான்அந்த படத்தை மீதும் வரைந்தேன்.

      Delete
  4. //இராம நாமத்தின் பெருமையையும், இராம பக்தியின் மேன்மையையும் பறை சாற்றும் இந்த விளக்கங்கள் குறிப்பாக ராம பக்தர்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.//

    மிகவும் பிடித்திருந்தது.

    படிக்கவும் ராம ரஸத்தை ருஸிக்கவும் ஏதோ கொஞ்சம் பாக்யம் செய்துள்ளோம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களோடு நானும்தான்
      யான் பெற்ற இன்பம் இவ்வையகம்

      Delete
  5. //என் கருத்துக்களை அமிர்த வர்ஷணி இதழில் வெளியிட்டு அதை அனேக ராம பக்தர்களிடம் கொண்டுசேர்த்த ஸ்ரீ ஆனந்த வாசுதேவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.//

    திருவாளர் ஆனந்த வாசுதேவன் அவர்களுக்கு எங்கள் ந்ன்றிகளையும் கூறிக்கொள்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களோடு சேர்த்து
      மீண்டும் மீண்டும் நன்றிகள் அவருக்கு

      Delete