Wednesday, September 2, 2015

இசையும் நானும் (46)

இசையும் நானும் (46)

இசையும் நானும் என்னும் தொடரில் 
என்னுடைய 46 வது காணொளி.

மவுதார்கன் இசை 

பத்மஸ்ரீ டி .எம். சவுந்திரராஜன் பாடி பிரபலமாகிய 
முருகன்  பாடல் 



                                                           ஓவியம்-தி.ஆர்.பட்டாபிராமன் 

முருகா ... முருகா ...

அழகென்ற சொல்லுக்கு முருகா (2)

உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

(அழகென்ற சொல்லுக்கு முருகா)

சுடராக வந்தவேல் முருகா
கொடும் சூரரை போரிலே வென்றவேல் முருகா (2)

கனிக்காக மனம் நொந்த முருகா (2)

முக்கனியான தமிழ்தந்த செல்வமே முருகா

(அழகென்ற ... )

ஆண்டியாய் நின்றவேல் முருகா
உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா (2)

பழம் நீ அப்பனே முருகா (2)

ஞானப் பழம் உன்னை அல்லாது பழமேது முருகா

(அழகென்ற ... )

உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
(அழகென்ற ... )

குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா (2)

சக்தி உமை பாலனே முருகா (2)

மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா

(அழகென்ற ... )

ப்ரணவப் பொருள்கண்ட திரு முருகா
பரம் பொருளுக்கு குருவான தேசிகா முருகா (2)

அரகரா ஷண்முகா முருகா (2)

என்றே பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா

(அழகென்ற ... )

அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா (2)

கண்கண்ட தெய்வமே முருகா (2)

எந்தன் கலியுக வரதனே அருள்தாரும் முருகா

(அழகென்ற ... )

உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

(அழகென்ற ... )

முருகா ... முருகா ... முருகா ... .


காணொளி இணைப்பு 

https://youtu.be/PVNU4JJdjvY


No comments:

Post a Comment