Wednesday, September 2, 2015

பக்திக்கு கட்டுப்படும் பரமனே !


பக்திக்கு 
கட்டுப்படும் பரமனே !


பக்திக்கு
கட்டுப்படும் பரமனே
பாற்கடலில் பள்ளி கொண்ட அரங்கனே





தஞ்சம் என்று வந்தவரை
தவறாது காக்கும் தயாபரனே

அண்டத்தில்
அகண்ட ஜோதியானாய்
பிண்டத்தின் உள்ளே
உறையும் ஆன்ம ஒளியானாய்

கண்டத்திலே நஞ்சை நிறுத்தி
நஞ்சுண்ட கண்டனானாய்

கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும்
கருப்பையில் மிதக்கும் கருவிற்கும்
கண்ணுக்கு புலப்படா உயிர்களுக்கும்
உணவு தந்து காக்கும் தாயானாய்

எங்கும் நிறைந்த பரப்ரம்மமே
அனைத்திலும்  ஊடுருவி
நிற்கும் ஆன்ம ஸ்வரூபமே






















ஓங்கி உலகளந்த உத்தமனே
என் இதயத்தினுள்ளும் ஒடுங்கி
நின்றருளும் உத்தமனே
உனக்கு வணக்கம். 

No comments:

Post a Comment