நான் உன்னுள்ளே இருக்கிறேன் !
ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்
எங்கும் நிறைந்த இறைவன்
அறிவே வடிவானவன்
அவனை அறிந்துகொள் என்பதை
நமக்கு உணர்த்தவே அவன்
"ஹரி" என்று பெயர் கொண்டான்
மனதின் எழும் எண்ணங்கள்
போடும் இரைச்சல்கள் அவன்
நம்மை அழைக்கும் குரலை
கேட்கவிடாமல் செய்துவிட்டது
மனதில் குவிந்துள்ள எண்ணங்களை
எட்டி வெளியே தள்ளிவிட்டால்
பெட்டிப் பாம்பாய் மனம் அடங்கிவிடும்
மூலாதாரத்தில் அடங்கியுள்ள
குண்டலினி பாம்பு தன் குருநாதனை
அடைய தானே மேல்நோக்கி
தன் பயணத்தை தொடங்கும்

அகத்தில் இருக்கும் அவனை
அறிந்துகொள்ளவே அந்த
ஆதி சங்கரன் மௌன மொழியை
விழி மூடி அவனையே தியானித்திருந்த
நால்வருக்கு மொழியாமல் மொழிந்தான்
ஆனால் எப்போதும் விழி திறந்து
உலக மோகத்திலே மூழ்கி
அறியாமை சேற்றில் கிடந்த
நம்மைப் போன்ற பேதைகளுக்காக
மறைகளிலே மறைந்து கிடந்த
உண்மைகளை கண்ணன்
கீதையை அளித்து மறைந்தான்

இந்நாளில் அவன் அறிவுரைகளை
செவிமடுப்போம். செம்மையான
வாழ்வு வாழ்ந்து சீலத்தை அடைவோம்.
images courtesy-google images
எங்கும் நிறைந்த இறைவன்
அறிவே வடிவானவன்
அவனை அறிந்துகொள் என்பதை
நமக்கு உணர்த்தவே அவன்
"ஹரி" என்று பெயர் கொண்டான்
மனதின் எழும் எண்ணங்கள்
போடும் இரைச்சல்கள் அவன்
நம்மை அழைக்கும் குரலை
கேட்கவிடாமல் செய்துவிட்டது
மனதில் குவிந்துள்ள எண்ணங்களை
எட்டி வெளியே தள்ளிவிட்டால்
பெட்டிப் பாம்பாய் மனம் அடங்கிவிடும்
மூலாதாரத்தில் அடங்கியுள்ள
குண்டலினி பாம்பு தன் குருநாதனை
அடைய தானே மேல்நோக்கி
தன் பயணத்தை தொடங்கும்
அகத்தில் இருக்கும் அவனை
அறிந்துகொள்ளவே அந்த
ஆதி சங்கரன் மௌன மொழியை
விழி மூடி அவனையே தியானித்திருந்த
நால்வருக்கு மொழியாமல் மொழிந்தான்
ஆனால் எப்போதும் விழி திறந்து
உலக மோகத்திலே மூழ்கி
அறியாமை சேற்றில் கிடந்த
நம்மைப் போன்ற பேதைகளுக்காக
மறைகளிலே மறைந்து கிடந்த
உண்மைகளை கண்ணன்
கீதையை அளித்து மறைந்தான்
இந்நாளில் அவன் அறிவுரைகளை
செவிமடுப்போம். செம்மையான
வாழ்வு வாழ்ந்து சீலத்தை அடைவோம்.
images courtesy-google images
பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்வோம்.
ReplyDeleteசெய்வோம்.
Deleteகோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுக்கும்
ReplyDeleteநன்றி DD
ReplyDelete