Monday, May 13, 2013

காண்பதெல்லாம் கண்ணனே


காண்பதெல்லாம் கண்ணனே 

















விண்ணில் எங்கோ
மறைந்து கிடந்தவன்
விண்ணோர்
தலைவனாய் விளங்குபவன்

வேத மறைகளுக்கும்
எட்டாப் பொருளானவன்

ஒருகணமும் அவனை
மறவாது நினைத்து
துதிக்கும் அடியார்களின்
உள்ளத்தில் உறைபவன்

பக்தரின் கண்களுக்கு
புலப்படும் விதமாய்
கண்ணனாய் ஆகி
களிப்பூட்டியவன்

காதலால் கசிந்துருகிய
கோதையின்
வடிவிலே
கலந்துவிட்டவன்.

மாலன், மாயவன்,மணிவண்ணன் ,
நேயன்,நிமலன்,நிர்க்குண பிரம்மன்
,நீர்வண்ணன்,நெடுமால்,
அடியவர்களின் ஆதாரம்
சோதிவடிவானவன்,
கண்ணனை பணிவோம்.


ஊனிலும்உயிரிலும்
கலந்து விட்ட அவனை
உள்ளுணர்வால்
உணர்ந்து தெளிவோம்.

4 comments:

  1. அருமை ஐயா...

    படத்தில் தங்களின் கைவண்ணம் தானே...?

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆம் இவனின் கைவண்ணம்தான்
      நன்றி DD

      Delete
  2. கண்ணன் அழகு. கண்ணனைப்போன்ற இந்தப்பதிவும் அழகோ அழகு. பாராட்டுக்கள்.

    ReplyDelete