Monday, March 31, 2014

ஸ்ரீ சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்

ஸ்ரீ சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள் 



ஞானத்தின் பலன் (2) 

உண்மையான சாதகன்
பிறரை மகிழ்ச்சி  அடையச் செய்கிறான்

தேவைப்படுவோருக்கு உதவுகிறான்
நோயாளி குணமடைய உதவுகிறான்
துன்பப்படுவோரின் துயர் போக உதவுகிறான்

பாதிக்கப்பட்டவர்களுக்கு
ஆறுதல் கூறுகிறான்

விரக்தி அடைந்தவர்களின் வேதனையைப் போக்கி
அவர்கள் நலம் பெறச் செய்கிறான்

ஏழைகளுக்கும்
வறியோர்களுக்கும் தொண்டு செய்

பெயர் புகழை விட்டுவிடு
தற்பெருமை கொள்ளாதே

தொண்டு செய்.
அன்பு காட்டு
தானம் செய்

ஒளி தரும் நகரை தரிசிக்கும்
யாத்ரீகராகப் பயணம் செய்

அகந்தையைக் கொன்றுவிடு .

துன்பப்படும் மனித குலத்திற்கு
தொண்டு செய் ஏழைகளுக்கும் துன்பப்படுவோருக்கும்
உதவி செய்வதற்காக உனது பணம் மற்றும் நேரம்
மற்றும் சக்தியைத் தியாகம் செய்

இது உனக்கு முக்தியையும்
விடுதலையையும் அளிக்கும்

கடமையை கடமைக்காகவே
செய்ய வேண்டும்.

கடமையைச் செய்ய பிறரிடம்
எதையும் எதிர்பார்க்கக்கூடாது

இதுதான் நல்வாழ்க்கைமற்றும்
அறிவுபூர்வமான வாழ்க்கையின் சட்டம்

இன்னும் வரும். 

1 comment:

  1. ஒன்றா... இரண்டா... எத்தனை பலன்கள்...! முதல் வரியே அனைத்தும் சொல்லி விடுகிறது...

    ReplyDelete