Monday, March 31, 2014

இறைவனை எங்கு வைத்து வழிபடவேண்டும்?

இறைவனை எங்கு 
வைத்து வழிபடவேண்டும்?

இறைவன் எல்லா இடத்திலும்,
 எல்லா பொருளிலும்
நிறைந்துள்ளான்



ஆத்மராமன்

ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

அவன் இந்த இடத்தில்  இருக்கிறான்
இந்த இடத்தில ,இந்த பொருளில்
 இல்லை என்று கூற முடியாது.

எப்படி என்றால் ,மின்சக்தி  பாயும்
 ஒரு கம்பியை எங்கு தொட்டாலும்
அதில் மின்சக்தி இருக்கும்.

அதை தொட்டால் அதிர்ச்சி ஏற்படும்.
அதுவே நாம் தாங்கக்கூடிய அளவை மிஞ்சினால்
 நம் உடல் எரிந்து கருகிவிடும் அல்லது.  சாம்பலாகிவிடும்.

ஒவ்வொரு உயிரிலும் இறைவனின் ஒரு அணு உள்ளது
அதுதான் நம்மையெல்லாம் இயங்கவும் செய்கிறது
இயங்காமல் இருக்கவும் செய்விக்கிறது .
அந்த அணுவே ஆன்மா என்றும்
அது கோடி சூரிய பிரகாசம் எ
ன்று சொல்லப்படுகிறது

அது வெளிப்படவேண்டுமேன்றால்
அதன் மேல் படிந்துள்ள அழுக்குகளை
 எல்லாம் அகற்றவேண்டும்.
அகற்றினால் அது பிரகாசிக்கும்.

கதிரவனை மறைக்கும் மேகங்கள்
அகன்றால் ஒளி தானே வீசுவதுபோல்
நம் மன மயக்கங்கள் அகலவேண்டும்
 நமக்குள் உள்ள ஆன்ம ஸ்வரூபம்  ஒளி  விடும்

அதற்க்கு நாம் புலன்களை கடந்து 
எல்லா நினைவுகளையும் ஒழித்து ,
அவன் நினைவாக மட்டும் நிலைத்து 
நின்றால் அவன் வெளிப்படுவான் 

இறைவன் ஒளி வடிவானவன்,
நம்முடைய புலன்கள்
அந்த ஒளியைத் தாங்கும் சக்தி கிடையாது.

ஒரு டார்ச் விளக்கிலிருந்து வரும்  ஒளியையே நம்மால்  தாங்க முடியவில்லை. அதை உற்றுப் பார்த்தல் நம் பார்வையே போய்விடுகிறது. அதன் ஒளியில் உள்ள நிறங்கள் நம் கண்ணை  விட்டு சில நிமிடங்கள் மறைவதில்லை.

நாம் தினமும் காணும் கதிரவன் ஒளியையே
 நம்மால் காண முடியவில்லை.
அவனைப் படைத்த பரம்பொருள்
எவ்வளவு ஒளி  மிக்கதாக இருக்கும்.

நமக்குள்ள அற்ப அறிவைக் கொண்டு
அதை கற்பனை செய்து பார்க்கக் கூட இயலாது.

மழைக்காலத்தில் காண நேரத்தில்
தோன்றி மறையும் மின்னால் கீற்றைக்
காணக் கூட  நமக்கு சக்தி கிடையாது.


அதுபோல்தான் அவன் ஒலி வடிவானவன்.
நம்முடைய புலன்கள் ஒலி  ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கீழே சென்றாலும் நமக்கு கேட்காது .குறிப்பிட்ட அளவிற்கு மேலே சென்றால் நமக்கு கேட்கும் சக்தியே  போய்விடும்.

புலன்களின் பின்னால் எபோதும்
ஓடிக்கொண்டிருக்கும் மனதினால்
இறைவனை அடையமுடியாது.

கணத்திற்குகணம் மாறிக்கொண்டிருக்கும்
மனதினால் இறைவனை சிந்தனை செய்ய முடியாது.

வடிவங்களையே இறைவன் என்றும் ,
ஒவ்வொரு வடிவமும் தனி தனி கடவுள் என்றும் நம்பிக்கொண்டிருக்கும் மனதினால் ,
பல லட்சக்கணக்கான நினைவுகளால்
சிதறிக் கிடக்கும் மனதினால் இறைவனைக் காண முடியாது.

இறைவனை அடைய
என்னதான் செய்யவேண்டும்?

அந்தஇறைவனிடமேதான்  அதற்குரிய சக்தியை
தருமாறு பிரார்த்தனை செய்யவேண்டும்.

நம்முடைய மனத்தைக் கொண்டு பிரார்த்தனை செய்யாமல்
 நம்முடைய் புத்தியில் அவனை வைத்து பிரார்த்தனை செய்தால்  அவன் நமக்கு வழி காட்டுவான்.

திருமூலர் விநாயகப் பெருமானை தன்னுடைய புத்தியில் (இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள புந்தியில்) வைத்து வேண்டுகிறார்.

தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் அரங்கப் பெருமானே ,புலன் வழியில் சிதறிப் போன என் மனதினால் உன்னை நான் துதிக்க  இயலவில்லை. இவன் பட்ட துன்பங்கள் போதும் என்று பெரிது மனது பண்ணி என்னுடைய புத்தியில் நீயே புகுந்து அருள் செய்தாயே என்று திருமாலையில் பாடி புகழ்கிறார்.

நாமும் இறைவனை நம்முடைய புந்தியில்
இறைவனை நினைத்து நமக்கு
அருள் செய்ய வேண்டுவோம். 

3 comments:

  1. பல உதாரணங்களுடன் சொன்னவிதம் சிறப்பு ஐயா...

    ReplyDelete
  2. //இறைவனை எங்கு வைத்து வழிபட வேண்டும்?//

    'மனதில் வைத்துதான் 'என்று எண்ணிக் கொண்டே வந்து படித்தேன். 'புந்தி' என்ற புதிய பதம் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  3. நாமும் இறைவனை நம்முடைய புந்தியில்
    இறைவனை நினைத்து நமக்கு
    அருள் செய்ய வேண்டுவோம்.

    நிறைவான வார்த்தை!..

    ReplyDelete