Saturday, March 8, 2014

நிழல் யுத்தம்

நிழல் யுத்தம்

நிழல் யுத்தம்
நிழல் யுத்தம் என்றால் என்ன ?



ஆம்  நாம் எல்லோரும்
நிழல்களுடந்தான் யுத்தம் செய்கின்றோம்
எப்படி?

பாமரனுக்கு நான் சொல்லுவது  புரியாது
ஏனென்றால் அவன் நிம்மதியான
வாழ்க்கை  நடத்துகிறான்
அவன் ஆசைகளும் குறைவு
வசதிகளும் குறைவு.
அவனுக்கு எல்லாமே நிஜம்.

இந்த பதிவு அனைவருக்கும் அல்ல

ஓரளவிற்கு பகவான் ரமணரின்
தத்துவங்களில் ஈடுபாடு,
பரிச்சயம் உள்ளவர்கள் மட்டும்
இதில் உள்ள உண்மையை
புரிந்துகொள்ளமுடியும்

மற்றவர்கள் இதை கண்டிப்பாக
ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

ஏனென்றால் நாமெல்லாம்
உயிரோடு இருக்கின்றோம்
,நம் எதிரில் உள்ளவர்களும்
உயிரோடு இருக்கின்றார்கள்.
நமை  சண்டைக்கு இழுக்கிறார்கள்
நாம்  சும்மா இருந்தாலும் கூட

பிறகு நம்மை நார் நாராகக் கிழித்துப் போட்டுவிட்டு
நாம்தான் அனைத்திற்கும் காரணம் என்று
 நம் மீது பழியையையும் சாமர்த்தியமாக
போட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள்.

நாம் நம் தலைவிதியை  நொந்துகொண்டு
இனிமேல் அவர்கள் விரிக்கும்
வலையில் மாட்டிக்கொள்ளக்கூடாது
என்று முடிவு செய்து அமைதியாய் 
இருக்க முயலுகிறோம்

இருந்தாலும் அவர்கள் விரிக்கும்
வலையிலிருந்து நாம் தப்ப முடியவில்லை.

பொழுது விடிந்ததும்  எப்படியாவது
நம்மை  வம்புக்கிழுத்து நம்மை
கிழித்துப் போட்டு விடுகிறார்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இதுபோன்ற
ஒரு நபர் கண்டிப்பாக இருப்பார்.
அவரிடம் யாராவது ஒருவர்
கண்டிப்பாக மாட்டிகொண்டு
அல்லல்படுவார்.

அனால் வெளிஉலகில் அவர்
மிக நல்லவராக போற்றபடுவார், மதிக்கப்படுவார்.

எப்படி இவர்களிடமிருந்து தப்பிப்பது?

அது தெரியாமல்தான் பல குடும்பங்கள்
 தங்கள் நிம்மதியை இழந்து தவிக்கின்றன.

 ஞானிகள் இதற்க்கு பல வழிகளை
 காட்டியுள்ளார்கள்.

அவைகளில் ஏதாவது ஒன்றாவது
பலன் தருகிறதா என்று பார்ப்போம்

இன்னும் வரும்.









2 comments:

  1. ஞானிகள் என்ன வழிகள் சொல்கிறார்கள்...?

    ஆவலுடன்...

    ReplyDelete
  2. நானும் காத்திருக்கிறேன்.

    ReplyDelete