Thursday, March 6, 2014

மயூர வாகனனே !

மயூர வாகனனே !


மயூர வாகனனே 
என் மனமெல்லாம் நிறைந்தவனே 

கைலாய மலைதனில்உதித்தாய் 
என் போன்ற கடையர்களைக் 
கடைதேற்ற காசினிக்கு 
வந்துவிட்டாய் 

உன் நாமம் சொல்பவர்க்கு 
நரகத்தில் இடம் இல்லை 

உன் வடிவழகில் மயங்குவோர்க்கு 
சொர்க்கமும் தேவையில்லை 

பிறவிப் பிணி அறுப்பவனே 
அகந்தை கிழங்கை 
அடியோடு நறுக்குபவனே 

முருகா என்னும் நாமம் 
முழுவதும் அகற்றிடும் காமம் 

முனைப்போடு சொல்வோருக்கு 
முயற்சி ஏதுமின்றி. 
முக்தியை அளித்திடுமே. 


ஓவியம்:தி.ரா.பட்டாபிராமன் 

2 comments:

  1. எதை பாராட்டுவது அல்லது வாழ்த்துவது...? ஐயா நீங்களே சொல்லுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. முருகனை வாழ்த்துங்கள்
      இவனை பாராட்டுங்கள்

      Delete